>நமக்கு வேறு வழியில்லை!

ஜனவரி 18, 2011

>


ஒரு கோப்பை தேநீர்

ஜூன் 21, 2010

நேற்று விமரிசையாக நடைப்பெற்று முடிந்த இண்ட்ராஃப் மக்கள் சக்தி / மனித உரிமை கட்சியின் பினாங்கு மாநில செயலக திறப்புவிழாவில் சிறப்பு அங்கமாக ‘ஒரு கோப்பை தேநீர்’ எனும் காணொளி அங்கம் இடம்பெற்று பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றது. அந்த காணொளியை உங்கள் சிந்தனைக்காக இங்கு பதிவிடுகிறேன்.

பாகம் 1
பாகம் 2


சிறுபான்மை இந்திய மலேசிய வம்சாவளியினரின் பிரச்சனைகள் தனிப்பட்டவை! – பினாங்கு கருத்தரங்கு

மே 5, 2010
அண்மையில் பினாங்கில்மலேசிய இந்தியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம், முன்னேறுவதற்கான வழிஎனும் கருப்பொருளில் நடைப்பெற்ற கருத்தரங்கின் காணொளி காட்சிகள் உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் இங்கு இணைத்துள்ளேன். மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் தனிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளையும், அவைகளை அரசியல் ரீதியில் களையும் தனிப்பட்ட மாற்று அரசியல் அணுகுமுறைகளையும் இண்ட்ராஃப் வழக்கறிஞர் திரு.பி.உதயகுமாரும், இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசனும் விளக்கிக் காட்டியுள்ளனர். நாமெல்லோரும் அரசியல் பயனீட்டாளர்கள் எனும் விழிப்புணர்வை இக்காணொளிகள் உங்களுக்கு அறியப்படுத்த உதவும் என நம்புகிறேன்.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
போராட்டம் தொடரும்

மக்கள் கூட்டணி பிரதிநிகளுக்கு ஒரு திறந்த மடல்!

பெப்ரவரி 1, 2009

கடந்த வாரம் சில முக்கிய சம்பவங்கள் அரங்கேறியதையடுத்து சில அடிப்படைக் கேள்விகள் நம்மை துளைத்தெடுக்கின்றன. குகன் எனும் இளைஞரின் மரணச் சம்பவத்தையொட்டிய பல கேள்விகள்! அவற்றில் சில நன்னெறிக் கேள்விகள், அரசியல் கேள்விகள், ஏனைய அடிப்படைக் கேள்விகள் இருக்கின்றன.

  1. முதல் அடிப்படைக் கேள்வி – “எந்தவொரு கொலையும் ஏற்றுக்கொள்ளகூடியதா?
  2. கொல்வதற்கு யாருக்கு உரிமை உண்டு?
  3. சில கொலைகள் மற்ற கொலைகளைவிட ஏற்றுக்கொள்ள கூடியதா?
  4. காவல்த்துறையினர் புரியும் கொலைகளுக்கும் மற்றவர்கள் புரியும் கொலைகளுக்கும் வேறுபாடுகள் உண்டா?
  5. சட்ட மீறல்கள் அடிப்படையில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்படுவது நியாயமா?
  6. ஏன் குகனின் கொலை குறித்து பலதரப்பட்ட தற்காப்பு வாதங்கள் எழுகின்றன?
  7. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பினரை ஏன் சிலர் பாதுகாக்க முனைகின்றனர்?
  8. கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காவல்த்துறையினரை தடுத்துவைப்பதற்கு ஏன் காவல்த்துறை சிரமப்படுகிறது? 25 நவம்பரன்று பத்துமலை முருகன் ஆலயத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக 60க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்களை பிணையற்ற தடுப்புக் காவலில் வைத்து கொலை குற்றச்சாட்டு மிக சுலபமாக சுமத்தப்பட்டதே.
  9. ஏன் பெரும்பான்மை மலேசியர்கள் இக்கொலை தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர்?
  10. ஏன் இண்ட்ராஃப் இயக்கமும், எதிர்க்கட்சி இந்திய பிரதிநிகளும், சில முற்போக்குசிந்தனையுள்ள வலைப்பதிவர்களுமே இவ்விடயம் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.
  11. இவ்விடயம் உண்மையிலேயே ஒட்டுமொத்த மலேசியரின் விவகாரமா அல்லது மலேசிய இந்தியர்களின் விவகாரமா? இவ்விடயம் ஒட்டுமொத்த மலேசியர்களின் விவகாரம் என மக்கள் வெளியில் கூறிக் கொண்டாலும், நடப்பதைக் கண்காணித்தால் மலேசிய இந்தியரின் விவகாரமாகத்தான் தெரிகிறது.

இவ்வனைத்து கேள்விகளையும் சிந்திக்கையில், நம் மலேசிய சமூத்தின் அடிப்படை இயக்கத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் இக்கருத்துக்கு உடன்படுகிறீர்களோ இல்லையோ, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சமூக இயக்கத்தில் நிலவிவரும் அடிப்படைக் கோளாறுகள் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதுடன், ஏனைய பிரச்சனைகளைவிட இதுதான் முதன்மையான பிரச்சனையாகக் கருத வேண்டியுள்ளது.

குகனின் மரணமும் மற்ற பிரச்சனைகளைப் போலவே அதிகமான ஆர்பாட்டமும் குறைவான நடவடிக்கை அல்லது நடவடிக்கையே இல்லாது போய்விடுமா. நடப்பதனைத்தையும் கவனிக்கையில் குகனின் மரணமும் காலத்தால் மறக்கடிக்கப்படும் வகையில் சார்ந்திருப்பதாக எனக்குத் தென்படுகிறதுஇவ்விடயத்தில் ஆத்திரமும், வெறுப்பும் என்னை ஆட்படுத்துகின்றன. ஆனால், இக்கூற்றைப் பொய்யாக்க முடியும். சரியான சிந்தனைக் கொண்ட மனிதர்கள் இருந்தால்,( நான் குறிப்பிடுவது மனிதர்களை மட்டுமே, மலாய், சீனர், இந்தியர்கள் என பாகுபடுத்திக் கூறவில்லை) இதுதான் சமயமென அனைவரும் ஒருமித்தக் குரலெழுப்பி காவல்த்துறையினரின் அராஜகம் இனிவருங்காலங்களில் தொடராதிருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவலாம்.


இவ்விவகாரம் உண்மையிலேயே ஒரு மலேசியனின் விவகாரம் என அனைவரும் சிந்தித்தால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் ( மாணிக்கவாசகம், மனோகரன், சிவராசா போன்றோர் அல்ல) காவல்த்துறை ஒழுங்கு குறித்த சுயேட்சை விசாரணைக் குழு அமைத்திட குரலெழுப்ப வேண்டும். இதனையே தேசிய முன்னணியின் பிரதிநிகளையும் செய்யச் சொல்லி நான் கூற விரும்பவில்லை, காரணம் அது பயனற்றது. என்னுடைய இக்கூற்று பொய் என்றால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி இவ்விடயம் குறித்து பேசப்படும்பொழுது தேசிய முன்னணியின் பிரதிநிகள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும்.

இவையனைத்தும் நடைப்பெறுவதற்குமுன் என்னுள் ஒரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் கூட்டணியால் இவ்விவகாரத்தை உண்மையிலேயே கையிலெடுத்து நல்லதொரு தீர்வு பிறக்கும்வரை போராட முடியுமா அல்லது தன்னுடைய அரசியல் லாபத்தை கணக்கிட்டபின் இதற்கு ஒரு முடிவு எடுப்பார்களா? சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா? குகனின் மரணத்தை ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்காது, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என உவமையாக்கி அவர்கள் பார்த்தால் நான் கூறியபடியே அவர்களின் நடத்தை வெளிப்படும்.

காத்திருந்து பார்ப்போம்

(திரு.நரகன்)


மக்கள் கூட்டணி பிரதிநிகளுக்கு ஒரு திறந்த மடல்!

பெப்ரவரி 1, 2009

கடந்த வாரம் சில முக்கிய சம்பவங்கள் அரங்கேறியதையடுத்து சில அடிப்படைக் கேள்விகள் நம்மை துளைத்தெடுக்கின்றன. குகன் எனும் இளைஞரின் மரணச் சம்பவத்தையொட்டிய பல கேள்விகள்! அவற்றில் சில நன்னெறிக் கேள்விகள், அரசியல் கேள்விகள், ஏனைய அடிப்படைக் கேள்விகள் இருக்கின்றன.

  1. முதல் அடிப்படைக் கேள்வி – “எந்தவொரு கொலையும் ஏற்றுக்கொள்ளகூடியதா?
  2. கொல்வதற்கு யாருக்கு உரிமை உண்டு?
  3. சில கொலைகள் மற்ற கொலைகளைவிட ஏற்றுக்கொள்ள கூடியதா?
  4. காவல்த்துறையினர் புரியும் கொலைகளுக்கும் மற்றவர்கள் புரியும் கொலைகளுக்கும் வேறுபாடுகள் உண்டா?
  5. சட்ட மீறல்கள் அடிப்படையில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்படுவது நியாயமா?
  6. ஏன் குகனின் கொலை குறித்து பலதரப்பட்ட தற்காப்பு வாதங்கள் எழுகின்றன?
  7. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பினரை ஏன் சிலர் பாதுகாக்க முனைகின்றனர்?
  8. கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காவல்த்துறையினரை தடுத்துவைப்பதற்கு ஏன் காவல்த்துறை சிரமப்படுகிறது? 25 நவம்பரன்று பத்துமலை முருகன் ஆலயத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக 60க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்களை பிணையற்ற தடுப்புக் காவலில் வைத்து கொலை குற்றச்சாட்டு மிக சுலபமாக சுமத்தப்பட்டதே.
  9. ஏன் பெரும்பான்மை மலேசியர்கள் இக்கொலை தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர்?
  10. ஏன் இண்ட்ராஃப் இயக்கமும், எதிர்க்கட்சி இந்திய பிரதிநிகளும், சில முற்போக்குசிந்தனையுள்ள வலைப்பதிவர்களுமே இவ்விடயம் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.
  11. இவ்விடயம் உண்மையிலேயே ஒட்டுமொத்த மலேசியரின் விவகாரமா அல்லது மலேசிய இந்தியர்களின் விவகாரமா? இவ்விடயம் ஒட்டுமொத்த மலேசியர்களின் விவகாரம் என மக்கள் வெளியில் கூறிக் கொண்டாலும், நடப்பதைக் கண்காணித்தால் மலேசிய இந்தியரின் விவகாரமாகத்தான் தெரிகிறது.

இவ்வனைத்து கேள்விகளையும் சிந்திக்கையில், நம் மலேசிய சமூத்தின் அடிப்படை இயக்கத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் இக்கருத்துக்கு உடன்படுகிறீர்களோ இல்லையோ, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சமூக இயக்கத்தில் நிலவிவரும் அடிப்படைக் கோளாறுகள் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதுடன், ஏனைய பிரச்சனைகளைவிட இதுதான் முதன்மையான பிரச்சனையாகக் கருத வேண்டியுள்ளது.

குகனின் மரணமும் மற்ற பிரச்சனைகளைப் போலவே அதிகமான ஆர்பாட்டமும் குறைவான நடவடிக்கை அல்லது நடவடிக்கையே இல்லாது போய்விடுமா. நடப்பதனைத்தையும் கவனிக்கையில் குகனின் மரணமும் காலத்தால் மறக்கடிக்கப்படும் வகையில் சார்ந்திருப்பதாக எனக்குத் தென்படுகிறதுஇவ்விடயத்தில் ஆத்திரமும், வெறுப்பும் என்னை ஆட்படுத்துகின்றன. ஆனால், இக்கூற்றைப் பொய்யாக்க முடியும். சரியான சிந்தனைக் கொண்ட மனிதர்கள் இருந்தால்,( நான் குறிப்பிடுவது மனிதர்களை மட்டுமே, மலாய், சீனர், இந்தியர்கள் என பாகுபடுத்திக் கூறவில்லை) இதுதான் சமயமென அனைவரும் ஒருமித்தக் குரலெழுப்பி காவல்த்துறையினரின் அராஜகம் இனிவருங்காலங்களில் தொடராதிருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவலாம்.


இவ்விவகாரம் உண்மையிலேயே ஒரு மலேசியனின் விவகாரம் என அனைவரும் சிந்தித்தால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் ( மாணிக்கவாசகம், மனோகரன், சிவராசா போன்றோர் அல்ல) காவல்த்துறை ஒழுங்கு குறித்த சுயேட்சை விசாரணைக் குழு அமைத்திட குரலெழுப்ப வேண்டும். இதனையே தேசிய முன்னணியின் பிரதிநிகளையும் செய்யச் சொல்லி நான் கூற விரும்பவில்லை, காரணம் அது பயனற்றது. என்னுடைய இக்கூற்று பொய் என்றால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி இவ்விடயம் குறித்து பேசப்படும்பொழுது தேசிய முன்னணியின் பிரதிநிகள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும்.

இவையனைத்தும் நடைப்பெறுவதற்குமுன் என்னுள் ஒரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் கூட்டணியால் இவ்விவகாரத்தை உண்மையிலேயே கையிலெடுத்து நல்லதொரு தீர்வு பிறக்கும்வரை போராட முடியுமா அல்லது தன்னுடைய அரசியல் லாபத்தை கணக்கிட்டபின் இதற்கு ஒரு முடிவு எடுப்பார்களா? சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா? குகனின் மரணத்தை ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்காது, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என உவமையாக்கி அவர்கள் பார்த்தால் நான் கூறியபடியே அவர்களின் நடத்தை வெளிப்படும்.

காத்திருந்து பார்ப்போம்

(திரு.நரகன்)


மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் கட்சியைவிட்டு விலகலாமா?

ஜனவரி 5, 2009

காலங்காலமாக இந்நாட்டு இந்தியர்களிடையே நிலவிவரும் அதிருப்தியானது, அவ்வப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பலவிதமான முறைகளில் பிரதிபலிக்கத்தான் செய்கின்றது. அந்த தொடர் பட்டியலில் தற்போது இணைந்திருப்பது, மக்கள் கூட்டணியிலிருந்து விலகப்போவதாய் அறிக்கை வெளியிட்டுவரும் ஒரு பிரதிநிதியின் தன்னிலை விளக்கம்தான். இவ்விடயம் தொடர்பாக நான் கூறவரும் கருத்துகளில், சம்பந்தப்பட்டவர்களின்பாலும் அவர்கள் கொண்டுள்ள முடிவுகளில்பாலும், குற்றத்தைக் கண்டுபிடிப்பது என் நோக்கமல்ல. ஆனால், உண்மை நிலவரம் குறித்த வித்தியாசமான ஒரு புரிதலும், இவ்விடயம் குறித்து புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பதும் மிக முக்கியம் என நான் கருதுகிறேன். இந்த பிரச்சனையை விவேகத்தன்மையோடு அணுகுவதன்வழி தேவையற்ற கருத்து முரண்பாடுகள் எழுவதையும், அது பூதாகரமாக்கப்படுவதையும் தவிர்க்க இயலும்.

தற்சமயம் சூடுபிடித்து வரும் இந்த அதிருப்திகரமான சூழ்நிலைக்கும் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களின் பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. மலேசிய இந்தியர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள 18 அம்ச கோரிக்கைகளில் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை திரு.உதயகுமார் தெள்ளத் தெளிவாகவும் அரசு எந்திரங்களுக்கு உறைக்கும்படியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இண்ட்ராஃபின் நவம்பர் 25 பேரணி நிகழ்விற்குப் பின் ஏற்பட்டுவரும் பலவகையான மாற்றங்களின்வழி, மாற்றத்தை கொண்டுவரும் பொறுப்பு வகித்துவரும் தரப்பினர்களால் அதிகம் அறியப்படாத சிறுபான்மையினரான மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகள் 18 அம்ச கோரிக்கைகளின்வழி பலரின் பார்வைகளை ஈர்க்கும்படிச் செய்தது. ஆனால் இவர்கள் இவ்விடயங்களை அணுகும் முறையானது பழைய திராட்சை மதுவை புதிய புட்டியில் ஊற்றிவைப்பதற்கு சமமானதாகும்.

18 அம்ச கோரிக்கைகளானது குறிப்பாக சிறுபான்மை மலேசிய இந்திய சமூகத்தை பின்னடைவிற்கு இட்டுச் செல்லும் முக்கிய காரண காரணியங்களை ஆழமாக படம் பிடித்து காட்டியுள்ளது. அதேவேளை இக்கோரிக்கைகளானது, நம் நாட்டின் நிர்வாகமானது புதிய பரிணாமத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவை வலியுறுத்துகின்றன. இத்தனைக்கும் நம்மிடம் மிஞ்சியுள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அரசு நிர்வாக முறையில் நாம் எதிர்ப்பார்க்கின்ற மாற்றங்கள் நிகழுமா?

நம்மிடையே நிலவிவரும் அதிருப்திகளுக்கு இக்கேள்விதான் அடிப்படைக் காரணம்! இதனைப் பின்புலமாகக் கொண்டே ஒவ்வொரு பிரச்சனையையும் குறித்த நம்முடைய புரிதலும் அணுகுமுறையும் இருக்க வேண்டும். நம் நாட்டின் சில அடிப்படை அரசு நிர்வாகக் கொள்கைகளில் மாற்றம் எற்படவேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். இந்த புரிதல் நம்மிடையே இல்லையேல், நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வுகளை மட்டுமே சிந்தித்து, முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு இருந்துவருமே ஒழிய நிரந்தர தீர்வுக்கு அவை நம்மை என்றும் இட்டுச் செல்லப் போவதில்லை! ஏற்றத்தாழ்வுகள் மிக்க அரசுக் கொள்கைகளில் சம உரிமையைத் தேடுவதற்கு இது ஒப்பாகும்.

இந்நாட்டின் தலையாய சட்டமானதும், மனித உரிமைகளுக்கும், சம உரிமைகளுக்கும் அறக்காவலனாக விளங்கிவருவதுமான மலேசிய அரசியலமைப்புச் சட்டமானது தொடர்ச்சியாக பங்கப்படுத்தப்பட்டு வருவதை எதிர்த்து முன்வைக்கப்பட்டவைதான் இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகள்! தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகள் கையாளப்பட்டு வருவதாலும், நாட்டின் வளப்பத்தை மக்களிடையே சரிசமமாகப் பங்கீடு செய்வதில் பாராபட்சம் காட்டப்பட்டு வருவதாலும், அரசியல் சாசனத்தின்மீது மக்களிடையே நம்பிக்கை அற்றுப்போனது மட்டுமல்லாது, மலேசியா ஒரு பல்லின மக்கள் கலவைக் கொண்ட, பல சமய நம்பிக்கைகள் புழங்கிவரும் நாடு எனும் கூற்று மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் அக்கறையுள்ளவராக இருந்தால், இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகளை ஒருமுறை தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். இக்கோரிக்கைகளானது மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைப் பிரச்சனைகளைக் கோடிட்டு காட்டியிருந்தாலும், ஒரு நாட்டிற்கு அடிப்படைத் தேவைகளை ஆய்வு கண்ணோட்டத்தில் முழுமையான வடிவில் படம்பிடித்துக் காட்டியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள். தேசிய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே 18 அம்சக் கோரிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்! தேசிய கொள்கைகளில் நாம் புதிய அணுகுமுறைகள் கண்டால்தான் நாட்டு மக்களின் நலன்களை பேணுவதிலும், மக்களின் ஒட்டுமொத்த திறன்களை நாட்டு வளப்பத்திற்காகவும் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் முறையாகப் பயன்படுத்துவதில் வெற்றிகாண இயலும். நடைமுறை தேசியக் கொள்கைகள் இவைகளை வலியுறுத்தவில்லை என்பதே உண்மை!


தற்சமயம் பாரிசானாகட்டும், மக்கள் கூட்டணியாகட்டும், கண்டிப்பாக இந்த மாற்றங்களில் விளையக்கூடிய நன்மைகளை அவர்கள் மதித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை என்றுதான் கூறவேண்டும். என்னுடைய வாதங்கள் இனவாதக் குப்பை என பலராலும் ஒதுக்கப்பட்டுவிடலாம். ஒதுக்கப்படுவதைத்தான் நானும் கூறுகிறேன், நம் நாட்டுக் கொள்கைகளில் நிறைய பரிணாமக் கோளாறுகள் இருக்குகின்றன.
18 அம்சக் கோரிக்கைகளையும் தீவிரமாகவும், நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டும் நோக்கின் மறுமலர்ச்சிக்கான வித்தினை நாம் எதிர்ப்பார்க்கலாம். தற்சமயம் நிலவிவரும் உலகப் பொருளாதார மந்த நிலையையும், நிலைப்பாடற்ற அரசியல் தன்மையையும் கருத்தில் கொண்டு இக்கோரிக்கைகளை முன்வைப்பது இடம், பொருள், ஏவல், சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்று என்றே கருதவேண்டியுள்ளது. நாட்டின் முன்னோடி அரசியல் கட்சிகளான பாரிசானாகட்டும், பாக்காத்தான் கூட்டு அரசியல் கட்சிகளாகட்டும், மாற்றம் நிகழ வேண்டிய கட்டாயத்தை அவர்கள் உணரவேண்டிய தருணம் இதுவாகும். வாய்ப்பும் தருணமும் கூடிவரும் வேளையில் அதனைத் தவறவிட்டு வீழ்ச்சியின் விளிம்பில் அனைவரும் தோற்றுப்போன கதைகள் சரித்திரம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்களாகும்.

தற்சமயம், மக்கள் கூட்டணியின் தலைமைத்துவமானது மலேசிய இந்தியர்களிடையே தலைதூக்கிவரும் பிரச்சனைகளை முழுமையானதொரு புரிதலோடு, அதனை பல்நோக்கு அணுகுமுறைகளின்வழி தீர்வுகாண வேண்டியது அவசியமாகிறது. மக்கள் கூட்டணியினர் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை கேட்டு புரிந்து கொண்டு, அதற்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பலனை விளைவிப்பதாயும் இருத்தல் மிக அவசியம். மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள் தலைமைத்துவத்தோடு சந்திப்பு கூட்டங்கள் நடத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். இவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 18 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி தேசியக் கொள்கைகளில் தெள்ளத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு மக்கள் கூட்டணியின் தலைமைத்துவம் இணங்கும் வரையில், இந்தியப் பிரதிநிகள் கூட்டணியிலிருந்து விலகாதிருக்க வேண்டும். இந்தியர்களின் 18 அம்சக் கோரிக்கைகளைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்ட பின்பே எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும். இதுதான் அனைத்து மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பும்!

ஒன்று, மேற்கூறிய கருத்துகளின் சாரத்தை நாம் நன்கு உணர்ந்து தக்க நடவடிக்கையில் இறங்க வேண்டும்! இல்லையேல், சரித்திரம் நம்மை மிதித்துச் சென்றுவிடும்!

ஒன்றுபடுவோம்!
ஒன்றாய் செயல்படுவோம்!

ஆக்கம் : திரு.நரகன்
மூலம் : ஆங்கிலக் கட்டுரை ( Should the PR representatives leave? )

போராட்டம் தொடரும்


மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் கட்சியைவிட்டு விலகலாமா?

ஜனவரி 5, 2009

காலங்காலமாக இந்நாட்டு இந்தியர்களிடையே நிலவிவரும் அதிருப்தியானது, அவ்வப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பலவிதமான முறைகளில் பிரதிபலிக்கத்தான் செய்கின்றது. அந்த தொடர் பட்டியலில் தற்போது இணைந்திருப்பது, மக்கள் கூட்டணியிலிருந்து விலகப்போவதாய் அறிக்கை வெளியிட்டுவரும் ஒரு பிரதிநிதியின் தன்னிலை விளக்கம்தான். இவ்விடயம் தொடர்பாக நான் கூறவரும் கருத்துகளில், சம்பந்தப்பட்டவர்களின்பாலும் அவர்கள் கொண்டுள்ள முடிவுகளில்பாலும், குற்றத்தைக் கண்டுபிடிப்பது என் நோக்கமல்ல. ஆனால், உண்மை நிலவரம் குறித்த வித்தியாசமான ஒரு புரிதலும், இவ்விடயம் குறித்து புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பதும் மிக முக்கியம் என நான் கருதுகிறேன். இந்த பிரச்சனையை விவேகத்தன்மையோடு அணுகுவதன்வழி தேவையற்ற கருத்து முரண்பாடுகள் எழுவதையும், அது பூதாகரமாக்கப்படுவதையும் தவிர்க்க இயலும்.

தற்சமயம் சூடுபிடித்து வரும் இந்த அதிருப்திகரமான சூழ்நிலைக்கும் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களின் பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. மலேசிய இந்தியர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள 18 அம்ச கோரிக்கைகளில் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை திரு.உதயகுமார் தெள்ளத் தெளிவாகவும் அரசு எந்திரங்களுக்கு உறைக்கும்படியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இண்ட்ராஃபின் நவம்பர் 25 பேரணி நிகழ்விற்குப் பின் ஏற்பட்டுவரும் பலவகையான மாற்றங்களின்வழி, மாற்றத்தை கொண்டுவரும் பொறுப்பு வகித்துவரும் தரப்பினர்களால் அதிகம் அறியப்படாத சிறுபான்மையினரான மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகள் 18 அம்ச கோரிக்கைகளின்வழி பலரின் பார்வைகளை ஈர்க்கும்படிச் செய்தது. ஆனால் இவர்கள் இவ்விடயங்களை அணுகும் முறையானது பழைய திராட்சை மதுவை புதிய புட்டியில் ஊற்றிவைப்பதற்கு சமமானதாகும்.

18 அம்ச கோரிக்கைகளானது குறிப்பாக சிறுபான்மை மலேசிய இந்திய சமூகத்தை பின்னடைவிற்கு இட்டுச் செல்லும் முக்கிய காரண காரணியங்களை ஆழமாக படம் பிடித்து காட்டியுள்ளது. அதேவேளை இக்கோரிக்கைகளானது, நம் நாட்டின் நிர்வாகமானது புதிய பரிணாமத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவை வலியுறுத்துகின்றன. இத்தனைக்கும் நம்மிடம் மிஞ்சியுள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அரசு நிர்வாக முறையில் நாம் எதிர்ப்பார்க்கின்ற மாற்றங்கள் நிகழுமா?

நம்மிடையே நிலவிவரும் அதிருப்திகளுக்கு இக்கேள்விதான் அடிப்படைக் காரணம்! இதனைப் பின்புலமாகக் கொண்டே ஒவ்வொரு பிரச்சனையையும் குறித்த நம்முடைய புரிதலும் அணுகுமுறையும் இருக்க வேண்டும். நம் நாட்டின் சில அடிப்படை அரசு நிர்வாகக் கொள்கைகளில் மாற்றம் எற்படவேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். இந்த புரிதல் நம்மிடையே இல்லையேல், நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வுகளை மட்டுமே சிந்தித்து, முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு இருந்துவருமே ஒழிய நிரந்தர தீர்வுக்கு அவை நம்மை என்றும் இட்டுச் செல்லப் போவதில்லை! ஏற்றத்தாழ்வுகள் மிக்க அரசுக் கொள்கைகளில் சம உரிமையைத் தேடுவதற்கு இது ஒப்பாகும்.

இந்நாட்டின் தலையாய சட்டமானதும், மனித உரிமைகளுக்கும், சம உரிமைகளுக்கும் அறக்காவலனாக விளங்கிவருவதுமான மலேசிய அரசியலமைப்புச் சட்டமானது தொடர்ச்சியாக பங்கப்படுத்தப்பட்டு வருவதை எதிர்த்து முன்வைக்கப்பட்டவைதான் இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகள்! தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகள் கையாளப்பட்டு வருவதாலும், நாட்டின் வளப்பத்தை மக்களிடையே சரிசமமாகப் பங்கீடு செய்வதில் பாராபட்சம் காட்டப்பட்டு வருவதாலும், அரசியல் சாசனத்தின்மீது மக்களிடையே நம்பிக்கை அற்றுப்போனது மட்டுமல்லாது, மலேசியா ஒரு பல்லின மக்கள் கலவைக் கொண்ட, பல சமய நம்பிக்கைகள் புழங்கிவரும் நாடு எனும் கூற்று மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் அக்கறையுள்ளவராக இருந்தால், இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகளை ஒருமுறை தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். இக்கோரிக்கைகளானது மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைப் பிரச்சனைகளைக் கோடிட்டு காட்டியிருந்தாலும், ஒரு நாட்டிற்கு அடிப்படைத் தேவைகளை ஆய்வு கண்ணோட்டத்தில் முழுமையான வடிவில் படம்பிடித்துக் காட்டியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள். தேசிய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே 18 அம்சக் கோரிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்! தேசிய கொள்கைகளில் நாம் புதிய அணுகுமுறைகள் கண்டால்தான் நாட்டு மக்களின் நலன்களை பேணுவதிலும், மக்களின் ஒட்டுமொத்த திறன்களை நாட்டு வளப்பத்திற்காகவும் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் முறையாகப் பயன்படுத்துவதில் வெற்றிகாண இயலும். நடைமுறை தேசியக் கொள்கைகள் இவைகளை வலியுறுத்தவில்லை என்பதே உண்மை!


தற்சமயம் பாரிசானாகட்டும், மக்கள் கூட்டணியாகட்டும், கண்டிப்பாக இந்த மாற்றங்களில் விளையக்கூடிய நன்மைகளை அவர்கள் மதித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை என்றுதான் கூறவேண்டும். என்னுடைய வாதங்கள் இனவாதக் குப்பை என பலராலும் ஒதுக்கப்பட்டுவிடலாம். ஒதுக்கப்படுவதைத்தான் நானும் கூறுகிறேன், நம் நாட்டுக் கொள்கைகளில் நிறைய பரிணாமக் கோளாறுகள் இருக்குகின்றன.
18 அம்சக் கோரிக்கைகளையும் தீவிரமாகவும், நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டும் நோக்கின் மறுமலர்ச்சிக்கான வித்தினை நாம் எதிர்ப்பார்க்கலாம். தற்சமயம் நிலவிவரும் உலகப் பொருளாதார மந்த நிலையையும், நிலைப்பாடற்ற அரசியல் தன்மையையும் கருத்தில் கொண்டு இக்கோரிக்கைகளை முன்வைப்பது இடம், பொருள், ஏவல், சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்று என்றே கருதவேண்டியுள்ளது. நாட்டின் முன்னோடி அரசியல் கட்சிகளான பாரிசானாகட்டும், பாக்காத்தான் கூட்டு அரசியல் கட்சிகளாகட்டும், மாற்றம் நிகழ வேண்டிய கட்டாயத்தை அவர்கள் உணரவேண்டிய தருணம் இதுவாகும். வாய்ப்பும் தருணமும் கூடிவரும் வேளையில் அதனைத் தவறவிட்டு வீழ்ச்சியின் விளிம்பில் அனைவரும் தோற்றுப்போன கதைகள் சரித்திரம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்களாகும்.

தற்சமயம், மக்கள் கூட்டணியின் தலைமைத்துவமானது மலேசிய இந்தியர்களிடையே தலைதூக்கிவரும் பிரச்சனைகளை முழுமையானதொரு புரிதலோடு, அதனை பல்நோக்கு அணுகுமுறைகளின்வழி தீர்வுகாண வேண்டியது அவசியமாகிறது. மக்கள் கூட்டணியினர் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை கேட்டு புரிந்து கொண்டு, அதற்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பலனை விளைவிப்பதாயும் இருத்தல் மிக அவசியம். மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள் தலைமைத்துவத்தோடு சந்திப்பு கூட்டங்கள் நடத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். இவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 18 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி தேசியக் கொள்கைகளில் தெள்ளத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு மக்கள் கூட்டணியின் தலைமைத்துவம் இணங்கும் வரையில், இந்தியப் பிரதிநிகள் கூட்டணியிலிருந்து விலகாதிருக்க வேண்டும். இந்தியர்களின் 18 அம்சக் கோரிக்கைகளைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்ட பின்பே எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும். இதுதான் அனைத்து மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பும்!

ஒன்று, மேற்கூறிய கருத்துகளின் சாரத்தை நாம் நன்கு உணர்ந்து தக்க நடவடிக்கையில் இறங்க வேண்டும்! இல்லையேல், சரித்திரம் நம்மை மிதித்துச் சென்றுவிடும்!

ஒன்றுபடுவோம்!
ஒன்றாய் செயல்படுவோம்!

ஆக்கம் : திரு.நரகன்
மூலம் : ஆங்கிலக் கட்டுரை ( Should the PR representatives leave? )

போராட்டம் தொடரும்


பிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி

நவம்பர் 21, 2008

இன்றையமலேசிய நண்பன்நாளிதழில் தலையங்கச் செய்தியில் சாருக்கானுக்கு டத்தோ விருது, மக்களின் வாழ்த்தும் வருத்தமும் என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால் வெளிநாட்டுப் பிரமுகருக்கு வழங்கும்டத்தோஎனும் உயரிய விருது மலேசியர்களுக்கு, அதிலும் குறிப்பாக சாதனை புரிந்த பல மலேசியத் தமிழர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை எனும் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது அக்கட்டுரை.

இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எசு.எம்.முகம்மது இத்ரீசு அவர்களின்சுவடுகள் மறைந்தால்எனும் நூலில் வெளிவந்தக் கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது.

அவர் கூறும் சில கருத்துகளை நாம் அலசிப் பார்ப்போம்..

மக்களுக்கு விருது வழங்குவதில் மலேசியாவை எந்த நாடும் தோற்கடிக்க முடியாது. நம்முடைய நாட்டில் மொத்தம் 13 மாநிலங்கள். ஒவ்வொரு மாநில சுல்தான் அல்லது ஆளுநர் பிறந்தநாளுக்கும், சமுதாயத்தில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மாமன்னரின் பிறந்தநாள் என்றால் மத்திய விருதுக்கு வாய்ப்பு உண்டு. “டான் சிறீ“, “டத்தோ“, “பி.சே.கே“, “.எம்.என்என்று ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் பேர் பட்டங்கள் சூட்டி மகிழ்விக்கப்படுகின்றனர்.

நாட்டின், சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதில் தப்பில்லைதான். நல்லது செய்த ஒருவருக்கு அங்கீகாரம் வழங்குவது நற்பண்புதானே. மற்றவர்களும் அதே வழியில் சேவையாற்ற வழிகோளும் ஒரு நடவடிக்கையே இது. ஆனால் இந்த விருது வழங்கும் நடவடிக்கையில் சில கெட்ட விளைவுகளும் அடங்கியே இருகின்றன. சமுதாயத்துக்கு உண்மையாக நேர்மையாக உழைக்கும் ஒருவர் பெரும்பாலும் விருதுகளை எதிர்பார்ப்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே நினைப்பது கூட கிடையாது.

சேவை செய்பவர் இப்படி இருக்கையில் விருது பெற்றால் அதிலிருந்து பிற்காலங்களில் தமக்கு ஏதாவது நன்மை விளையும் என்று எதிர்பார்த்து விருதை விரைந்து நாடுபவர்களும் உண்டு. “டான் சிறீ“, “டத்தோஎன்ற பட்டம் இருந்தால் மேற்கொண்டு வரும் வியாபாரத்தை இன்னும் விருத்தி செய்து கொள்ளலாம், செய்கின்ற தொழிலில் இன்னும் பெரிய பதவி, உயர்வான வாழ்க்கை என்ற பார்வையிலேயே விருதுகளுக்காக பரபரக்கிறார்கள். பெயருக்கும் முன்னால் வரும் இந்தப் பட்டங்கள் தன்னுடைய மதிப்பை உயர்த்திவிட்டதாக ஒரு மிதப்பு அவர்களுக்கு.

குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு, நேர்மையாக உழைத்தவர்களுக்கு இந்த விருது தரப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் விருது கிடைக்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. சனநாயக நாட்டில் எல்லோரும் சமம்தான். இந்த விருது வழங்கும் கலாசாரம் மக்களிடையே பேதத்தை வளர்த்து வருகிறது.

பெரிய விருந்துகளிலும், வைபவங்களிலும் முக்கிய புள்ளிகள் வரும்பொழுது பாருங்கள். வரவேற்புரை நிகழ்த்தப்படும்பொழுது யாங் ஆமாட் பெரோர்மாட், டான் சிறீ, புவான் சிறீ, டத்தோ, டத்தின்என்று வரிசைப்படுத்திவிட்டு பிறகுதான் துவான் புவானுக்கு மரியாதை. நிகழ்வு நடந்து முடிந்த பின்பு உணவருந்துவதற்கு இவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறை ஒதுக்கப்பட்டு உணவு பரிமாறப்படுகிறது. இப்படித் தரம் பிரித்துப் பார்க்கும் பழக்கத்தை நாம் பிரிட்டிசுகாரர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம்.

எல்லா நாடுகளும், சேவையாற்றிய வீரப் பிரசைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால் சில நாடுகள் மட்டுமே விருதுகள் வழங்கி பெயருக்கு முன்னால் பட்டத்தையும் சேர்த்து எழுதிக்கொள்ள வைத்து வாழ்நாள் முழுக்க குதூகலிக்க வைக்கிறது.

சேவை செய்தவர்களுக்கு அங்கீகாரம் தேவைதான். ஆனால் பெயருக்கு முன்னால் பட்டத்தையெல்லாம் கொடுத்து சராசரி மனிதனை விட அவர்கள் உசத்தி என்று தலை மேல் தூக்கிக் கொண்டாடுவது முறைதானா?

சிந்தித்துப் பாருங்கள்….


பிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி

நவம்பர் 21, 2008

இன்றையமலேசிய நண்பன்நாளிதழில் தலையங்கச் செய்தியில் சாருக்கானுக்கு டத்தோ விருது, மக்களின் வாழ்த்தும் வருத்தமும் என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால் வெளிநாட்டுப் பிரமுகருக்கு வழங்கும்டத்தோஎனும் உயரிய விருது மலேசியர்களுக்கு, அதிலும் குறிப்பாக சாதனை புரிந்த பல மலேசியத் தமிழர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை எனும் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது அக்கட்டுரை.

இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எசு.எம்.முகம்மது இத்ரீசு அவர்களின்சுவடுகள் மறைந்தால்எனும் நூலில் வெளிவந்தக் கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது.

அவர் கூறும் சில கருத்துகளை நாம் அலசிப் பார்ப்போம்..

மக்களுக்கு விருது வழங்குவதில் மலேசியாவை எந்த நாடும் தோற்கடிக்க முடியாது. நம்முடைய நாட்டில் மொத்தம் 13 மாநிலங்கள். ஒவ்வொரு மாநில சுல்தான் அல்லது ஆளுநர் பிறந்தநாளுக்கும், சமுதாயத்தில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மாமன்னரின் பிறந்தநாள் என்றால் மத்திய விருதுக்கு வாய்ப்பு உண்டு. “டான் சிறீ“, “டத்தோ“, “பி.சே.கே“, “.எம்.என்என்று ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் பேர் பட்டங்கள் சூட்டி மகிழ்விக்கப்படுகின்றனர்.

நாட்டின், சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதில் தப்பில்லைதான். நல்லது செய்த ஒருவருக்கு அங்கீகாரம் வழங்குவது நற்பண்புதானே. மற்றவர்களும் அதே வழியில் சேவையாற்ற வழிகோளும் ஒரு நடவடிக்கையே இது. ஆனால் இந்த விருது வழங்கும் நடவடிக்கையில் சில கெட்ட விளைவுகளும் அடங்கியே இருகின்றன. சமுதாயத்துக்கு உண்மையாக நேர்மையாக உழைக்கும் ஒருவர் பெரும்பாலும் விருதுகளை எதிர்பார்ப்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே நினைப்பது கூட கிடையாது.

சேவை செய்பவர் இப்படி இருக்கையில் விருது பெற்றால் அதிலிருந்து பிற்காலங்களில் தமக்கு ஏதாவது நன்மை விளையும் என்று எதிர்பார்த்து விருதை விரைந்து நாடுபவர்களும் உண்டு. “டான் சிறீ“, “டத்தோஎன்ற பட்டம் இருந்தால் மேற்கொண்டு வரும் வியாபாரத்தை இன்னும் விருத்தி செய்து கொள்ளலாம், செய்கின்ற தொழிலில் இன்னும் பெரிய பதவி, உயர்வான வாழ்க்கை என்ற பார்வையிலேயே விருதுகளுக்காக பரபரக்கிறார்கள். பெயருக்கும் முன்னால் வரும் இந்தப் பட்டங்கள் தன்னுடைய மதிப்பை உயர்த்திவிட்டதாக ஒரு மிதப்பு அவர்களுக்கு.

குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு, நேர்மையாக உழைத்தவர்களுக்கு இந்த விருது தரப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் விருது கிடைக்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. சனநாயக நாட்டில் எல்லோரும் சமம்தான். இந்த விருது வழங்கும் கலாசாரம் மக்களிடையே பேதத்தை வளர்த்து வருகிறது.

பெரிய விருந்துகளிலும், வைபவங்களிலும் முக்கிய புள்ளிகள் வரும்பொழுது பாருங்கள். வரவேற்புரை நிகழ்த்தப்படும்பொழுது யாங் ஆமாட் பெரோர்மாட், டான் சிறீ, புவான் சிறீ, டத்தோ, டத்தின்என்று வரிசைப்படுத்திவிட்டு பிறகுதான் துவான் புவானுக்கு மரியாதை. நிகழ்வு நடந்து முடிந்த பின்பு உணவருந்துவதற்கு இவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறை ஒதுக்கப்பட்டு உணவு பரிமாறப்படுகிறது. இப்படித் தரம் பிரித்துப் பார்க்கும் பழக்கத்தை நாம் பிரிட்டிசுகாரர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம்.

எல்லா நாடுகளும், சேவையாற்றிய வீரப் பிரசைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால் சில நாடுகள் மட்டுமே விருதுகள் வழங்கி பெயருக்கு முன்னால் பட்டத்தையும் சேர்த்து எழுதிக்கொள்ள வைத்து வாழ்நாள் முழுக்க குதூகலிக்க வைக்கிறது.

சேவை செய்தவர்களுக்கு அங்கீகாரம் தேவைதான். ஆனால் பெயருக்கு முன்னால் பட்டத்தையெல்லாம் கொடுத்து சராசரி மனிதனை விட அவர்கள் உசத்தி என்று தலை மேல் தூக்கிக் கொண்டாடுவது முறைதானா?

சிந்தித்துப் பாருங்கள்….


ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?

நவம்பர் 5, 2008

அடுத்து நீங்கள் படிக்கவிருக்கும் விடயம் நிச்சயம் உங்கள் புருவங்களை உயர்த்தும். அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன்,கென்னடி ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்கிறது.

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு சுவாரசியமான மடலை தமிழாக்கம் செய்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். சிலர் இவ்விடயம் குறித்து ஏற்கனவே படித்திருக்கலாம், இருப்பினும் மீண்டும் ஒரு மீள்பார்வை..

ஒரு வரலாறு நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைப்பெற்றக் கதையிது!

ஆபிரகாம் லிங்கன் 1846-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப். கென்னடி 1946-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆபிரகாம் லிங்கன் 1860-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப்.கென்னடி 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவர்களிருவரும் குடிமக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்தியவர்கள்.

இவர்களிருவரின் மனைவிமார்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசம் செய்த காலத்தில்தான் தங்கள் பிள்ளைகளை இழந்தனர்.

இவ்விரு அதிபர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாகும்.

இவ்விருவருமே தலையில் சுடப்பட்டு இறந்தனர்.

ஆச்சரியமாக இருக்கிறதா…?

லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.

கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.

இவ்விரு அதிபர்களுமே தென் மாநிலங்களைச் சார்ந்த நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விரு அதிபர்களைக் கொலைச் செய்த கொலையாளிகளின் பெயரும் சான்சன்.

லிங்கனுக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற அண்ட்ரூ சான்சன் 1808-ஆம் ஆண்டில் பிறந்தவாராவார்.

கென்னடிக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற லிண்டன் சான்சன் 1908-ஆம் ஆண்டில் பிறந்தவராவார்.

லிங்கனைக் கொலைச் செய்த சான் வில்க்ஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவராவார்.

கென்னடியைக் கொலைச் செய்த லீ ஆர்வீ ஓஸ்வெல்ட் 1939-ஆம் ஆண்டி பிறந்தவராவார்.

இவ்விரு கொலையாளிகளின் முழுப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுப் பெயர்கள் அடங்கியுள்ளன.

இவ்விரு கொலையாளிகளின் பெயர்களுமே 15 ஆங்கில எழுத்துகளால் அமைந்தவை.

(John Wilkes Booth , Lee Harvey Oswald)

என்ன, படிக்கப் படிக்க ஆச்சரியமாக உள்ளதா?

லிங்கன் – ‘ஃபோர்டு’ என்றழைக்கப்படும் ஒரு திரையரங்கில் கொல்லப்பட்டார்.

கென்னடி – ‘ஃபோர்டு’ நிறுவனம் தயாரித்த ‘லிங்கன்’ எனும் மகிழுந்தில் பயணம் செய்யும்போது கொல்லப்பட்டார்.

திரையரங்கில் லிங்கனைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

கென்னடியைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கிலிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, பின் ஒரு திரையரங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

இவ்விரு கொலையாளிகளும் (பூத், ஓஸ்வெல்ட்), நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டனர்.


இங்குதான் சுவாரசியமே உள்ளதுமேலும் தொடர்ந்து படியுங்கள்..

லிங்கன் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மான்றோ, மேரிலாண்ட் எனுமிடத்தில் இருந்தார்.

கென்னடி இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மர்லின் மன்றோ எனும் நடிகையுடன் இருந்திருக்கிறார்.

தகவல்களனைத்தும் எப்படி இருந்தன? ஆச்சரியமாக உள்ளதா…?

இதனையடுத்து மற்றொரு சுவாரசியமான விடயமும் கைவசம் இருக்கிறது! அதனை அடுத்தப் பதிவில் காணலாம்.. :)


Follow

Get every new post delivered to your Inbox.