>காணொளி : கெடா மாநில மனித உரிமைக் கட்சியின் செயலக திறப்புவிழா

ஜூலை 20, 2010

>

போராட்டம் தொடரும்…


வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! – உதயகுமார்

மே 19, 2009
கடந்த 17-ஆம் திகதி மே மாதமன்று, பத்துமலை வளாகத்தில் திரு.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் முடிகணிக்கை செலுத்தினார். இந்நிகழ்வில் சுமார் 3,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். காலை 6 மணி தொடங்கி பத்துமலையில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். 10.30 மணியளவில் உதயகுமார் பத்துமலை அருகில் அமைந்துள்ள ஆற்றங்கரைக்கு வருகைப் புரியும்பொழுது கூட்டம் 2000க்கும் மேல் கூடியிருந்தது. அங்கு முடிகாணிக்கை செலுத்தியபின்பு, அனைவரும் திரளாக பத்துமலை முருகனை தரிசிக்கச் சென்றனர். நண்பகல் 12 மணியளவில் ஆதரவாளர்கள் கூட்டம் சுமார் மூவாயிரத்தை எட்டியிருந்தது.

பிரார்த்தனை முடிந்தவுடன், திரு.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பின்பு, உயரமான முருகன் சிலை முன்பு திரளாகத் திரண்டிருந்த மக்கள் முன்பு அவர் சுவாரசியமாக உரை நிகழ்த்தினார்.

514 நாட்கள் கொடூரச் சட்டத்தின்கீழ் கமுந்திங் தடுப்புக் காவலில் சிறைவைக்கப்பட்டாலும், அண்ணன் உதயாவின் எண்ணம் , பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் அதே பழைய உதயாவை அன்று நமக்கு நினைவூட்டின என்று கூறலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலர் மாறிவிட்டனர். உதயா மட்டும் தான் முன்னெடுத்த போராட்டத்தினின்று துளியளவும் மாறவில்லை!

அன்றைய உரையில் உதயகுமார் கூறியது :-

போராட்டம்னு வந்துட்டா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்!” இதுதான் உதயாவின் கொள்கை.

பாகம் 1

பாகம் 2
போராட்டம் தொடரும்

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! – உதயகுமார்

மே 19, 2009
கடந்த 17-ஆம் திகதி மே மாதமன்று, பத்துமலை வளாகத்தில் திரு.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் முடிகணிக்கை செலுத்தினார். இந்நிகழ்வில் சுமார் 3,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். காலை 6 மணி தொடங்கி பத்துமலையில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். 10.30 மணியளவில் உதயகுமார் பத்துமலை அருகில் அமைந்துள்ள ஆற்றங்கரைக்கு வருகைப் புரியும்பொழுது கூட்டம் 2000க்கும் மேல் கூடியிருந்தது. அங்கு முடிகாணிக்கை செலுத்தியபின்பு, அனைவரும் திரளாக பத்துமலை முருகனை தரிசிக்கச் சென்றனர். நண்பகல் 12 மணியளவில் ஆதரவாளர்கள் கூட்டம் சுமார் மூவாயிரத்தை எட்டியிருந்தது.

பிரார்த்தனை முடிந்தவுடன், திரு.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பின்பு, உயரமான முருகன் சிலை முன்பு திரளாகத் திரண்டிருந்த மக்கள் முன்பு அவர் சுவாரசியமாக உரை நிகழ்த்தினார்.

514 நாட்கள் கொடூரச் சட்டத்தின்கீழ் கமுந்திங் தடுப்புக் காவலில் சிறைவைக்கப்பட்டாலும், அண்ணன் உதயாவின் எண்ணம் , பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் அதே பழைய உதயாவை அன்று நமக்கு நினைவூட்டின என்று கூறலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலர் மாறிவிட்டனர். உதயா மட்டும் தான் முன்னெடுத்த போராட்டத்தினின்று துளியளவும் மாறவில்லை!

அன்றைய உரையில் உதயகுமார் கூறியது :-

போராட்டம்னு வந்துட்டா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்!” இதுதான் உதயாவின் கொள்கை.

பாகம் 1

பாகம் 2
போராட்டம் தொடரும்

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! – உதயகுமார்

மே 19, 2009
கடந்த 17-ஆம் திகதி மே மாதமன்று, பத்துமலை வளாகத்தில் திரு.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் முடிகணிக்கை செலுத்தினார். இந்நிகழ்வில் சுமார் 3,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். காலை 6 மணி தொடங்கி பத்துமலையில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். 10.30 மணியளவில் உதயகுமார் பத்துமலை அருகில் அமைந்துள்ள ஆற்றங்கரைக்கு வருகைப் புரியும்பொழுது கூட்டம் 2000க்கும் மேல் கூடியிருந்தது. அங்கு முடிகாணிக்கை செலுத்தியபின்பு, அனைவரும் திரளாக பத்துமலை முருகனை தரிசிக்கச் சென்றனர். நண்பகல் 12 மணியளவில் ஆதரவாளர்கள் கூட்டம் சுமார் மூவாயிரத்தை எட்டியிருந்தது.

பிரார்த்தனை முடிந்தவுடன், திரு.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பின்பு, உயரமான முருகன் சிலை முன்பு திரளாகத் திரண்டிருந்த மக்கள் முன்பு அவர் சுவாரசியமாக உரை நிகழ்த்தினார்.

514 நாட்கள் கொடூரச் சட்டத்தின்கீழ் கமுந்திங் தடுப்புக் காவலில் சிறைவைக்கப்பட்டாலும், அண்ணன் உதயாவின் எண்ணம் , பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் அதே பழைய உதயாவை அன்று நமக்கு நினைவூட்டின என்று கூறலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலர் மாறிவிட்டனர். உதயா மட்டும் தான் முன்னெடுத்த போராட்டத்தினின்று துளியளவும் மாறவில்லை!

அன்றைய உரையில் உதயகுமார் கூறியது :-

போராட்டம்னு வந்துட்டா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்!” இதுதான் உதயாவின் கொள்கை.

பாகம் 1
பாகம் 2
போராட்டம் தொடரும்

தமிழீழத்திற்காக குரல் கொடுக்கும் தன்மானத் தமிழன் சீமான்..!

அக்டோபர் 24, 2008

தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..! அவனை அடித்தால் கேட்பதற்கென்று நாதியில்லை! ஆனால் தமிழனுக்கென்று தன்மானம் உண்டு, அந்தத் தன்மானம் உலகின் 13 கோடித் தமிழர்களுக்கும் உண்டென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி வருவது தமிழீழ விடுதலைப் போராட்டம். தமிழ் தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் தற்போது தமிழக மக்களும் அணிதிரண்டு இலங்கை அரசிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சிறீ லங்கா அரசினால் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகத்தினர் கடந்த 19-ஆம் திகதி அத்தோபர் மாதம் இராமேசுவரத்தில் கண்டனக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அலையலையாகத் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இயக்குநரும் நடிகருமான திரு.சீமான் சிறப்பாக உரையாற்றி வந்திருந்தோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இதோ அவரின் உணர்ச்சிகரமான உரை…

பகுதி 1

பகுதி 2
பகுதி 3

உணர்ச்சிப்பொங்க உரையாற்றிய தன்மானத் தமிழன் சீமானையும் இயக்குநர் அமீரையும் இன்று மாலை தமிழக காவல்த்துறையினர் கைது செய்துள்ளதாக அறியப்படுகிறது. இலங்கை தமிழருக்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்திய பிறகு பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி கொடுக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் இருவரும் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்…!! தன்மானத் தமிழனுக்கு எங்குதான் எதிரிகள் இல்லை..!

****

கவனிக்கவும் !

வலைஞர் திரு சத்தீசு எமக்கு அனுப்பிய முக்கிய அறிக்கை :

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவெர்த்து.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீசு முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீசு 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்


தமிழீழத்திற்காக குரல் கொடுக்கும் தன்மானத் தமிழன் சீமான்..!

அக்டோபர் 24, 2008

தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..! அவனை அடித்தால் கேட்பதற்கென்று நாதியில்லை! ஆனால் தமிழனுக்கென்று தன்மானம் உண்டு, அந்தத் தன்மானம் உலகின் 13 கோடித் தமிழர்களுக்கும் உண்டென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி வருவது தமிழீழ விடுதலைப் போராட்டம். தமிழ் தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் தற்போது தமிழக மக்களும் அணிதிரண்டு இலங்கை அரசிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சிறீ லங்கா அரசினால் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகத்தினர் கடந்த 19-ஆம் திகதி அத்தோபர் மாதம் இராமேசுவரத்தில் கண்டனக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அலையலையாகத் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இயக்குநரும் நடிகருமான திரு.சீமான் சிறப்பாக உரையாற்றி வந்திருந்தோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இதோ அவரின் உணர்ச்சிகரமான உரை…

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

உணர்ச்சிப்பொங்க உரையாற்றிய தன்மானத் தமிழன் சீமானையும் இயக்குநர் அமீரையும் இன்று மாலை தமிழக காவல்த்துறையினர் கைது செய்துள்ளதாக அறியப்படுகிறது. இலங்கை தமிழருக்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்திய பிறகு பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி கொடுக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் இருவரும் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்…!! தன்மானத் தமிழனுக்கு எங்குதான் எதிரிகள் இல்லை..!

****

கவனிக்கவும் !

வலைஞர் திரு சத்தீசு எமக்கு அனுப்பிய முக்கிய அறிக்கை :

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவெர்த்து.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீசு முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீசு 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்


உதயாவின் வீர கர்ஜனை..

செப்டம்பர் 7, 2008

25 நவம்பர் பேரணிக்கு மக்கள் சக்தியை ஒன்று திரட்ட, புயலாய் புறப்பட்ட திரு.உதயகுமார், 18 நவம்பர் அன்று பினாங்கு குட்டி இந்தியாவில் அமைந்துள்ள சீனர் மண்டபத்தில் ஆற்றிய வீரச் சொற்பொழிவின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு…

மேலும் சில ஒளிப்படக்காட்சிகள் யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டு இங்கு இடம்பெறும்..

ஒளிப்படக்காட்சிகள் : அரிபாலன் (நன்றி)


உதயாவின் வீர கர்ஜனை..

செப்டம்பர் 7, 2008

25 நவம்பர் பேரணிக்கு மக்கள் சக்தியை ஒன்று திரட்ட, புயலாய் புறப்பட்ட திரு.உதயகுமார், 18 நவம்பர் அன்று பினாங்கு குட்டி இந்தியாவில் அமைந்துள்ள சீனர் மண்டபத்தில் ஆற்றிய வீரச் சொற்பொழிவின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு…

மேலும் சில ஒளிப்படக்காட்சிகள் யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டு இங்கு இடம்பெறும்..

ஒளிப்படக்காட்சிகள் : அரிபாலன் (நன்றி)


வாக்கு நமது போதிமரம்

ஆகஸ்ட் 14, 2008

சகோதரர்களே …

நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக – நம்
வாயில் திணிக்கிறார்கள் …

நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் …

நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்

நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்

நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் …

நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் …

நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் …

நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?

விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் …!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?

நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் – இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!

சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் …

வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!

(ஏ.எஸ்.பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com


வாக்கு நமது போதிமரம்

ஆகஸ்ட் 14, 2008

சகோதரர்களே …

நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக – நம்
வாயில் திணிக்கிறார்கள் …

நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் …

நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்

நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்

நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் …

நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் …

நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் …

நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?

விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் …!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?

நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் – இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!

சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் …

வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!

(ஏ.எஸ்.பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com


Follow

Get every new post delivered to your Inbox.