தொழில் முனைவர் மேம்பாட்டு வாரியம், பினாங்கு மாநில அரசின் ஆதரவோடு எதிர்வரும் 14-ஆம் திகதி திசம்பர் மாதம் தொழில்முனைவர் வழிகாட்டி கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ரி.ம1500 வெள்ளி மதிப்பிலான இக்கருத்தரங்கம் பினாங்குவாழ் மக்களுக்காக இலவசமாகவே நடத்தப்பெறுகிறது.
ஒரு தொழிலைத் தொடங்குவது, வெற்றிகரமாக அதனை நடத்துவது குறித்த பல பயனுள்ள தகவல்கள் அங்கு பரிமாறப்படும் என்பதால், பினாங்குவாழ் தமிழர்கள் இவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இக்கருத்தரங்கில் கலந்துக் கொள்ள விரும்பும் அன்பர்கள் இணையத்தின்வழியோ ( http://www.usahawanrakyat.com/ ) அல்லது கீழ்கண்ட பாரங்களின்வழியோ தன் முழு விபரங்களையும் பதிந்து ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவும்.


Sathis Kumar பதிப்பித்தது. 
