போராட்டம் தொடரும்…
பினாங்கின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமத்திற்கு ஆபத்து!
மே 7, 2011நீதி கேட்கும் முன்னாள் நிக்கோ தொழிற்சாலை ஊழியர்கள்!
பெப்ரவரி 9, 2010
புவா பாலா கிராம வழக்கு – நீதிமன்றத்திலிருந்து நேரடியாக..
ஆகஸ்ட் 21, 2009புவா பாலாவில் மனிதச் சங்கிலி!
ஆகஸ்ட் 14, 2009புல்டோசர்களை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் மனித சங்கிலி அமைத்து நில மேம்பாட்டாளர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆண்கள் வேளைக்குச் செல்லவில்லை! குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை! வீட்டில் உலை கொதிக்கவில்லை. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மக்களுக்கெதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் நில மேம்பாட்டாளர்கள் பின் வாங்கினார். ஆனால், இரவு நேரங்களில் அங்குள்ள கிராம மக்கள் நிம்மதியான உறக்கத்தினைக் காண இயலவில்லை. கனவுகளிலும் புல்டோசர்களின் சத்தம்!
இன்னும் எத்தனை முறை இம்மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்களோ??
போராட்டம் தொடரும்…
புவா பாலா நிலமோசடி – சில கேள்விகள்
ஆகஸ்ட் 9, 2009எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.
பினாங்கு மாநில அதிகாரிகள் கூட்டுறவுக் கழகத்திற்கு உங்கள் அரசு செய்த எங்கள் கிராம நில விற்பனை.
தேர்தல் தேதி : 8 மார்ச் 2008
கிராம செயற்குழு உங்களைச் சந்தித்த தேதி : 13 மார்ச் 2008
இந்தத் தேதியில் இன்னும் நில விற்பனை பூர்த்தி அடையாமல் இருந்தால், இந்த நில விற்பனையைத் தடுத்து நிறுத்துவதாக கிரமச் செயற்குழுவிடம் உறுதிக் கூறியுள்ளீர்கள்.
கேள்வி 1
ஏன் 14 மார்ச் 2008-ல், உங்கள் அரசாங்கம் ரி.ம 3.2 மில்லியனை அந்த கூட்டுறவுக் கழகத்திடமிருந்து பெற்றுக் கொண்டது?
கேள்வி 2
ஏன் 27 மார்ச் 2008-ல், உங்கள் அரசு அந்த கூட்டுறவின் பெயரில் புவா பாலா கிராம நிலத்தை பதிவு செய்தது?
கேள்வி 3
ஏன் 14 ஏப்ரல் 2008-ல், நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் எனும் மேம்பாட்டாளர் இந்த நிலத்தை கேவியட் செய்துக் கொள்ள உங்கள அரசு உடந்தையாக இருந்தது?
தேசிய நிலச் சட்டப்பிரிவு 320
உங்கள அரசு, புவா பாலா கிராம நில பரிவர்த்தனையில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. கிராம நிர்வாகத்தினரும் இந்தப் புகாரை இரண்டு முறை செய்துள்ளனர்.
கேள்வி 4
உங்கள் அரசு புவா பாலா நில விற்பனையில் நிறைய தவறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகப் புகார் செய்துள்ளது. அப்படியானால் ஏன் இந்த நிலப் பரிவர்த்தனையை முழுமைப் படுத்தி, நிலத்தை விற்று முடித்தீர்கள்?
தேசிய நிலச் சட்டப்பிரிவு 320-ன் படி, ஒரு நிலப் பரிவர்த்தனையில் தில்லுமுல்லு (FRAUD) கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலப் பட்டா மூலம் செய்யப்பட்ட நில உரிமை மாற்றம் தடுத்து நிறுத்த முடியும்.
கேள்வி 5
ஏன் உங்கள் அரசு, ஊழல் தடுப்பு ஆணையம், (MACC), தன் விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்கக் கூடாது? MACC பின்னர் தில்லு முல்லு நடந்திருப்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் அந்த கூட்டுறவுக்குக் கொடுத்த நிலத்தை மீட்டுக் கொள்ள வேண்டி வரும். இது கிராம மக்களுக்கு நன்மையாக முடியும். பின்னர் உங்கள் அரசு தலைவர்களான இராமசாமி, கர்பால் சிங், மற்றும் சனீசுவர நேதாஜி இராயர் ஆகியோர் கொடுத்த வாக்கிற்கிணங்க, இக்கிராமத்தை இந்திய பாரம்பரிய கிராமமாக அறிவிக்கலாம். ஏன், MACC விசாரணை முடிவிற்குக் காத்திருக்கக் கூடாது?
நிலப் பட்டாவில் கட்டுப்பாடுகள்
கேள்வி 6
நிலப்பட்டாவில் சில கட்டுப்பாடு சரத்துகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?
இந்த நிலம் எந்த வியாபார நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. அந்தக் கோப்பராசி எந்த தரப்பினரோடும் கூட்டு முயற்சியில் ( JOINT VENTURE ) நிலத்தை மேம்படுத்த அனுமதியில்லை.
கேள்வி 7
உங்கள் அரசு எப்படி தொடர்ந்து இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றது?
கேள்வி 8
உங்களுக்குப் பின் வரும் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தெரியுமா?
“கோ ஹீ சிங் Vs வில் ராஜா மற்றும் அனூர், உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர் மகாதேவ் (1993) வழங்கிய தீர்ப்பு”
மேற்கண்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலத்தை எவரும் கேவியட் செய்து கொள்ள முடியாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
கேள்வி 9
உங்கள் அரசாங்கம் எப்படி இந்த சட்டத்திற்குப் புறம்பான நில கேவிட்டை அனுமதித்தது? நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் இந்த புவா பாலா நில விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது, சட்டத்திற்குப் புறம்பானது என்பதை தாங்கள் அறியவில்லையா?
கேள்வி 10
இன்று வரை, அந்த நிலப்பட்டாவில் உள்ள கட்டுப்பாடுகள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா?
சிறி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் 3-8-2009 தேதியன்று, நீதிமன்றத்தில் தேசிய நிலச் சட்டம் பிரிவு 116(1)(d)-யைப் பயன்படுத்த விண்ணப்பம் செய்தாராம். அந்தச் சட்டப்பிரிவின்படி அரசு அனுமதியில்லாமல், மேம்பாட்டாளர் கிராமத்தை வந்து உடைத்து நொறுக்க முடியாது. இராயர் செய்த விண்ணப்பம் என்ன ஆனது? ஏன் லிம் அவர்களே நீங்கள் இந்த சட்டப்பிரிவைப் பற்றி அறவே பேச மாட்டேன் என்கிறீர்கள்?
கேள்வி 11
ஒருவர் தமக்கென்று, தம் சட்ட ஆலோசனைக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்வது பழக்கம்தானே?
நீங்கள் கிராம மக்களை ஒரு வழக்கறிஞர் பிரதிநிதித்து உங்களை சந்திப்பதை கடைசிவரை மறுத்து வந்துள்ளீர்கள்.
இது சரியா?
ஆ. திருவேங்கடம்
புவா பாலா கிராம மக்களுக்காக ..
தயவு செய்து இதனை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லவும்.
புவா பாலா வெள்ளிக்கிழமை உடைக்கப்படுமாம்!
ஆகஸ்ட் 4, 2009சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களிடம் அவர் கூறியதாவது ;
புவா பாலா கிராமத்தில் 1200 சதுர அடியில் இரண்டு மாடி வீடு. மேல் மாடி 600 சதுர அடி, கீழ் மாடி 600 சதுர அடி. வீட்டிற்கு வெளியில் கூடுதல் 200 சதுர அடி நிலம்.
அதாவது 6.5 ஏக்கர் புவா பாலா கிராம நிலத்தில் 0.7 ஏக்கர் நிலம் 24 குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வீடுகளைக் கட்டி முடிக்கும்வரையில் அக்கிராம மக்கள் தங்குவதற்கு தற்காலிக இடமோ, அல்லது வாடகைப் பணமோ ஏதும் கொடுக்கப்படாது. ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கு வீடோ அல்லது பணமோ கொடுக்கப்படாது.
இதனைச் சொல்லியே மக்களை பயமுறுத்தி, கொடுக்கும் ரொட்டித் துண்டுகளை வாங்கிக் கொண்டுச் செல்லுங்கள் என்கிறது பினாங்கு மாநில அரசு.
அவர்கள் பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திடுமாறு லிம் குவான் எங் மக்களை கேட்டுக் கொண்டார். ஆனால், மக்கள் தங்களுடைய முடிவை ஏதும் கூறாமல் வந்துவிட்டனர். இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கிராம மக்களின் வழக்கறிஞருக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கென்று ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையை சட்டம் நமக்கு வழங்குகிறது. ஆனால், 200 ஆண்டுகாலமாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு ஒரு வழக்கறிஞரை தங்களுடைய பிரதிநிதியாக வைத்துக் கொள்ளக்கூட அனுமதியளிக்கப்படவில்லை! இவர்கள் செய்த குற்றம் என்ன? 200 ஆண்டுகாலமாய் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொட்டி இந்நிலத்தில் வாழ்ந்தது குற்றமா?
அம்னோ அரசாங்கம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, மக்கள் கூட்டணியாவது எங்களைக் காப்பாற்றும் என நம்பியிருந்த இந்த அப்பாவி மக்களை அரசியல் இலாபத்திற்காக பகடைக் காய்களாகப் பலரும் பயன்படுத்திவிட்டனர்.
இம்மலேசிய திருநாட்டில், அதிகாரத்துவமும் முதலாளித்துவமும் எப்படியெல்லாம் ஏழை மக்களை நசுக்கிப் பிழிகிறது என்பதனைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். அதற்கு ஒரு நல்ல படிப்பினையான உதாரணம் கம்போங் புவா பாலா!
இன்னும் 48 மணி நேரங்களே எஞ்சியுள்ளன. நாம் என்ன செய்யப் போகிறோம்? வரலாற்றைப் புரட்டிப் போட வேண்டுமா? மாற்றைத்தை விரும்பினால் மட்டும் போதாது, அம்மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்! இந்நாட்டில் தமிழனுக்கென்று 200 ஆண்டுகால தொன்மையான கிராமம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் வருகையை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நிச்சயப்படுத்துங்கள்! இன்று 1000 பேர் திரண்டதைக் கண்டு அஞ்சியவர்கள் வெள்ளிக்கிழமையன்று திரளும் மக்கள் வெள்ளத்தைக் கண்டு தங்களுடைய முடிவையே மாற்றிக் கொள்ள வேண்டும்!
உடனடியாக லிம் குவான் எங்கை தேசிய நில சட்டவிதி பிரிவு 76-ஐ (National Land Code Section 76) பயன்படுத்தி புவா பாலா நிலத்தை கையகப்படுத்தி கிராம மக்களிடமே ஒப்படைக்குமாறு நெருக்குதல் கொடுங்கள். நாட்டில் பல இயக்கங்கள், சங்கங்கள் இருக்கின்றன. அனைத்து இயக்கங்களும் அவர்களுக்கே உரித்த பாணியில் நூதன போராட்டத்தை முன்னின்று மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
போராட்டம் தொடரும்…
புவா பாலா நிலமோசடி அம்பலம்! ஆதாரங்கள் சிக்கின!
ஜூலை 31, 2009இதனை லிம் குவான் எங்கிற்கு நினைவூட்டி உரிய நடவடிக்கை எடுக்க கோரும் முயற்சியாக இன்று புவா பாலா கிராம மக்கள் முதல்வரிடம் மனுவைச் சமர்ப்பிக்கச் சென்றனர். அம்மனுவை முதல்வரின் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார்.
போராட்டம் தொடரும்…
புவா பாலா முருகன் யுனேசுகோவிற்குப் பயணம்!
ஜூலை 28, 2009நாளை அவ்விருவரும் பாரிசு நகருக்கு பயணமாகின்றனர்.
முருகனின் இம்முயற்சி அனைத்துலக பார்வையை 6.5 ஏக்கர் புவா பால நிலத்தின் மீது விழ வைப்பதோடு, யுனேசுகோவின் நெருக்குதல்களின்வழி புவா பாலா கிராமத்தை காப்பாற்றி, அதனை தமிழர் பாரம்பரிய கிராமமாக நிலைப்பெறச் செய்ய முடியும் எனும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.
இதற்கிடையில், பினாங்கு மாநில அரசு நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சின் மேம்பாட்டு திட்டத்தை ரத்து செய்திருப்பினும் கூட்டரசு நீதிமன்றத்தின் ஆணையின்கீழ் புவா பாலா நிலத்தை இடித்துத் தள்ளுவதற்கு அந்நில மேம்பாட்டாளர்களுக்கு இன்னும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடயத்தில், மேலும் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.
கிராம மக்களின் வீடுகளை உடைத்துவிட்டு, பிறகு பேரம் பேசினால் மக்கள் அடிபணிந்துபோகக் கூடும், நட்ட ஈடை வாங்கிக் கொண்டு நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடும் என்பது மேம்பாட்டாளர்களின் திட்டங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என ஐயுறப்படுகிறது.
கிராம நிலத்தில் சிறுபகுதியை மட்டும் பாரம்பரிய நிலமாக ஒதுக்கீடு செய்து, பெறும்பகுதி நிலத்தில் நுஸ்மெட்ரோவின் ஆடம்பர அடுக்குமாடி திட்டத்தை செயல்படுத்த பினாங்கு மாநில அரசு நில மேம்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் வெற்றியளிக்கும் தீர்வாக பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் இதனை வழிமொழிந்தாலும், பாரம்பரிய நிலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்!
முறையே செயல்படுத்துவன வேண்டியவற்றை காலந்தாழ்த்தி செயலாற்றிவரும் பினாங்கு மாநில அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?
பொறுத்திருந்து பார்ப்போம்…
போராட்டம் தொடரும்…
புவா பாலா மக்களுக்கு கையெழுத்திடப்படாத கடிதம்..
ஜூலை 15, 2009பாரிசானாகட்டும் பக்காதானாகட்டும் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்தாம் என்பதற்கு இச்சம்பவங்கள் ஒரு சிறு உதாரணம்.
நிலம் மக்களுக்கே சொந்தம்! – உதயகுமார்
ஜூலை 14, 2009போராட்டம் தொடரும்…

Sathis Kumar பதிப்பித்தது. 







