குறைவில்லாதது..
இதோ முதல் பகுதி
இத்தொடரை நன்கு விளங்கிக் கொள்ள சில அடிப்படை தகவல்களோடு துவங்கலாம் என நினைக்கிறேன்.
மேற்காணும் பட்டியலில் மலேசிய இந்தியர்களின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 7.4 சதவிகிதம் என மலேசிய புள்ளிவிவர இலாகா தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையானது தனித்தன்மை வாய்ந்த சிறுபான்மையினர் குழாம் எனத் தெளிவாகத் தெரிகிறது.
நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை நாட்டு மொத்த உற்பத்தியில் தனி நபரின் ஆண்டு வருமானமானது 1960-ஆம் ஆண்டில் ரிம2500லிருந்து 2008-ஆம் ஆண்டிற்குள் ரிம15000 வரை உயர்ந்துள்ளது. இது ஒரு கணிசமான உயர்வு என்றே கொள்ளலாம். அடிப்படையில் நாட்டின் பொருளாதாரமானது கொள்முதல் பண்டங்கள் உற்பத்தி மற்றும் வேளாண்பொருளாதாரத்தையே (ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் உற்பத்தி) நம்பியிருந்த காலம்போய், தற்போது தயாரிப்புத் துறையை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை நம்மால் காண முடிகிறது.
நாட்டின் வளப்பத்திற்கு அச்சாணியாகவும் நவீன விவசாய உற்பத்தியாகவும் கருதப்பட்ட ரப்பர் உற்பத்தித் துறையில் மலேசிய இந்தியர்களின் பங்கு அளப்பரியதாகும். மலேசிய இந்தியர்களில் பெரும்பாலானோர் ரப்பர் தோட்டங்களில் மரம் சீவும் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். விவசாயத் துறை என்றாலே உணவு உற்பத்தி என்ற நிலையை மாறச் செய்து பெரும் முதலீடுகளை ஈர்த்து பணம் ஈட்டும் ஒரு துறையாகவும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறையாக ரப்பர் உற்பத்தித் துறை விளங்கத் தொடங்கியது. ரப்பர் உற்பத்தித் துறை வளர்ச்சி பெற்றுவந்த காலக்கட்டங்களில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு பெருமளவில் மாற்றத்தை அடைந்து புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. நடவுத் தொழிலைச் சார்ந்திருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல தொழிற்சாலை உற்பத்தியை சார்ந்திருக்கும் பொருளாதார நிலைமைக்கு தன்னை இட்டுச் செல்ல வழி அமைத்துக் கொண்டது. ஆங்காங்கே புதிய தொழிற்சாலைகள் பல தோன்றத் தொடங்கியதிலிருந்து ரப்பர் தோட்டங்களை நம்பியிருந்த பொருளாதாரம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி வளரத் தொடங்கியது. இதன்வழி நாட்டின் பெரும்பணம் ஈட்டும் முதன்மை துறையாக தொழிற்சாலை உற்பத்தித் துறை இடம்பெற்றது.
பொருளாதார நிலைமை பெரும் மாற்றத்தை கண்டுவந்த அதே சமயம் நாட்டின் அரசியல் நிலைமையும் பெரும் மாற்றத்தைக் கண்டுவந்தது. நம் நாட்டின் முக்கிய அரசியல் பரிணாமங்களை நான்கு கட்டங்களாக வகுக்கலாம், அதாவது 1957 முதல் 1969வரை, 1969 முதல் 1981வரை, 1981 முதல் 2004வரை, 2004 முதல் 2008வரையாகும். ஒவ்வொரு கட்டங்களும் வரலாற்று பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவை நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய சம்பவங்களோடு பிணைத்து, அவை ஏற்பட்டதற்கான காரணங்களையும் விளக்கிக் காட்ட வல்லவையாகும்.
இவ்வளவு பரிணாமங்களுக்கு இடையில் மலேசியாவின் சிறுபான்மையினராக விளங்கும் மலேசிய இந்தியர்கள் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றங்களிலிருந்து திட்டமிட்ட தேசியக் கொள்கைகளினால் வெளிப்படையாகவே ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.
மலேசியா அடைந்துவந்த துரிதமான பொருளாதார வளர்ச்சியின் பலனாக குறிப்பிட்ட சில இனங்களுக்கு கிடைத்துவந்த பலவிதமான உதவிகளைப் போலவே மலேசிய இந்தியர்களுக்கு சரிசமமான உரிய பங்கீடு ஒதுக்கப்படவில்லை. இந்தத் தொடரின்வழி மலேசிய இந்தியர்களில் ஏழை வகுப்பினர் நாட்டின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எந்தெந்த ரீதியில் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வந்தனர் என்பதனையும், எதனால் அவர்கள் ஓரங்கட்டுதலுக்கு ஆளானார்கள் என்பதனையும் விளக்க முயல்கிறேன்.
பெரும்பாலும் நமக்கு சில உண்மைகள் தெரியும். ஆனால், நமக்குத் தெரிந்தவை அங்கும் இங்கும் நிகழ்கிற சில சம்பவங்கள், மற்றும் திரிந்துபோன சில செய்திகளை மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். நான் செய்யவிருப்பது என்னவென்றால், ஆங்காங்கே நடந்த பல்வேறு சம்பவங்களை இணைத்து, புள்ளிகளை இணைத்துப் பார்த்து அவை சொல்லும் உண்மைகளை ஒரு பெரிய படமாக வரைந்து அதன் பின்புலங்களை உங்களுக்குத் தெளிவாக காட்டவிருக்கிறேன்.
ஆனால், முதலில் ’ஓரங்கட்டப்படுதல்’ என்ற பதத்தின் அர்த்தத்தை சற்று விளக்கிவிடுகிறேன்.
சமூகவியல் பார்வையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ என்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை கட்டங்கட்டமாக சில அதிரடி மறைமுக செயல்முறைகளின்வழி தொடர்ச்சியாக ஒடுக்கியும், தேசியப் பொருளாதார வெள்ளோட்டத்திலிருந்து ஒதுக்கியும், சில வரைமுறைகளின்வழி சமுதாய அடிமட்டத்தில் எல்லைக்குட்படுத்தி முக்கியமற்றவர்களாக முத்திரைக் குத்தப்பட்ட ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி ( மலேசிய இந்தியர் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இது மிகப் பொருந்தும்) நிரந்தரமாக புறக்கணிப்பதுதான் அதன் அர்த்தம். ‘ஓரங்கட்டுதலின்’ கொடூர நீட்சியானது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களையே அடியோடு வேரறுக்க இன அழிப்புவரை அதன் கரங்களை நீட்டச் செய்யும்.
இன்றுவரை பல சமூகங்கள் ‘ஓரங்கட்டுதலுக்கு’ உள்ளாகி சின்னாப்பின்னமாகியிருக்கின்றன. அதன் விளைவாக பலர் தங்களின் குடியிருப்புகளையும் சொந்த நிலங்களையும் இழந்திருக்கின்றனர், வலுக்கட்டாயமாக வறுமை புரையோடும் ஒதுக்குப்புற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர், பரம்பரை தொழிலையும் அதன் மூலம் ஈட்டக் கூடிய வருமானத்தையும் இழந்திருக்கின்றனர், வேலை வாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்படியாக தங்களின் கலாச்சாரத்தையும் இழந்து, சமூகத்தில் கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக வலுவிழந்து போனவர்கள் ஏராளம்.
மலேசிய இந்திய சமுதாயம் தொடர்ச்சியாக மலேசிய சமூகத்திடமிருந்து ‘ஓரங்கட்டப்பட்டு’, இன்றுவரை சில அடிப்படை உரிமைகளுக்கே போராட வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டதன் அடிப்படைக் காரணம் யாதெனில், அரசாங்கத்தின் நடைமுறைப் போக்குகளும், பக்கச்சார்பாக வகுக்கப்பட்ட தேசியக் கொள்கைகளும் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் யாவுமே அதிகார வர்கத்தின் தேவைகளுக்கேற்பவும், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு நாட்டின் வளங்களைச் சூறையாடி, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை புறக்கணிப்பதும் தொடர்ந்து நடைப்பெறுவதால்தான். இந்த ’ஓரங்கட்டுதலை’ நடைமுறைப்படுத்துவதிலும், அதனை பொது கண்ணோட்டத்திலிருந்து மறைப்பதிலும், திசைத்திருப்புவதிலும் அதிகார வர்க்கத்தினருக்கு முக்கியமான பங்கு உண்டு. நம்மிடையே நிலவும் பொதுவான கருத்துகளை அதிகார வர்கத்தினருக்கு சாதகமாக நிலைப்பெறச் செய்வதிலும், வலுப்படுத்தச் செய்வதிலும் அவர்கள் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை உண்மையின் அடிப்படையில் தெரிந்து கொள்வதற்கும் அணுகுவதற்கும் நமக்கு விதிக்கப்பட்ட சில வரைமுறைகளின்வழியும் தடைகளின்வழியும் உண்மை நிலவரங்களைத் தவறாக புரிந்துகொள்ளக் கூடிய சாத்தியங்களை விதைக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். இதன் விளைவாக உண்மையிலேயே மலேசிய இந்திய சமுதாயம் ‘ஓரங்கட்டப்பட்டு’ வருகிறதா என்ற சந்தேகத்தினை நமது சிந்தனையில் நாமே விதைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியங்களை அதிகார வர்க்கத்தினர் ஏற்படுத்துகிறார்கள்.
என்னுடைய பணி இதுதான். நிலவரங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாது, அதற்கான பின்னணிகளை ஆய்ந்து எடுத்துரைக்கவிருக்கிறேன்.
மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் ‘ஓரங்கட்டுதல்’ பன்முகங்கள் கொண்டவை. குறிப்பாக அதனை நான்கு பிரிவுகளாக நாம் வகுக்கலாம்.
1) பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்படுதல்
மலேசிய இந்திய சமூகம் தன்னை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்வதை நிராகரித்தல். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வெள்ளோட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுதல்.
2) அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுதல்
நாட்டு வளப்பம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பிரத்தியேக ஒதுக்கீடுகள் குறித்த முடிவெடுக்கும், நிர்ணயிக்கும் தகுதிகளையும் சரிசமமான வாய்ப்புகளையும் அரசியல் ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தல். நாட்டின் நேர்மையான அரசியல் செயல்பாடுகள் அரசியல் செல்வாக்குகளின்வழி கைப்பற்றப்படுதல். அதன் விளைவாக நாட்டு குடிமகனுக்கும், சிறுபான்மை வகுப்பினருக்கும் உரிய அடிப்படை அரசியல் உரிமைகள் பறிக்கப்படுதல்.
3) சமூக ரீதியில் ஓரங்கட்டப்படுதல்
கொதிக்கும் நீரின்மீது மிதக்கும் அசுத்த நுரையாக மலேசிய இந்தியர்களில் உழைக்கும் வர்க்கத்தினரின்மீது பல்வகையான முத்திரைகளைக் குத்தி அவர்களை ஒதுக்கி வைத்தல். மலேசிய இந்தியர்களின்மீது பொதுவாக நிறுவப்பட்ட சில மதிபீடுகள் யாதெனில், கூலிகள், குடிகாரர்கள், நம்பிக்கையற்றவர்கள், கறுப்பர்கள், அசுத்தமாகவும் துர்நாற்றமும் வீசக் கூடியவர்கள், பிறரை நம்பி சார்ந்திருப்பவர்கள், மற்றும் ஏழ்மை என்ற ஒரே காரணத்தினால் இன்னும் சில முத்திரைப் பெயர்களை இவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் மலேசிய இந்தியர்கள் குறித்த மற்றுமொரு வேடிக்கையான மதிப்பீடானது என்னவென்றால், மலேசிய இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், அவர்கள் மற்ற இனங்களைக் காட்டிலும் தரத்தில் சற்று தாழ்ந்தவர்களாம்.
பட்டியல் நீண்டுபோகும் பல தடைகளை உள்வாங்கிக் கொண்டு போராடும் ஒரு ஏழைச் சமூகம், தன்னை உயர்த்திக் கொண்டு தானும் மனிதன்தான் என்ற பெருமையோடு முன்னேறிச் செல்வதானது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. வாய்ப்புகளைப் பெறவும், பயன்படுத்தவும், மேம்படுத்திக்கொள்ளவும் மறுக்கப்பட்ட ஏழை மலேசிய இந்திய சமுதாயம் தன்னுடைய முக்கிய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட வழியில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
நான் மேற்குறிப்பிட்டப்படி ‘ஓரங்கட்டப்படுதல்’ எனும் திட்டங்களின் பிரிவுகளை ஒவ்வொரு கூறாக எனது தொடர் கட்டுரைகளின்வழி தெளிவுற விளக்கிக் காட்டவுள்ளேன். சமூகவியல் அடிப்படையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ ஏன் நிகழ்கிறது என்பதனை மேலும் விரிவாக விவாதிக்கவுள்ளேன். காலங்காலமாக மலேசிய இந்தியர்களின் நிலைமையினை மையப்படுத்தி எழுந்த பலவிதமான அலுப்புத் தட்டுகின்ற காரணங்களை உடைத்தெறிந்து, மலேசிய சமூகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள் இன்று வகிக்கும் பங்கிற்கு மூலகாரணம் குறித்தும் எழுதவிருக்கிறேன். நிச்சயமாக இத்தனைக்கும் நாம் இந்தியர்கள் / தமிழர்கள் என்ற ஒரே காரணம் அல்லது நமக்குள் உறைந்திருப்பதாக பேசப்படும் இனவழி மரபும் அதன்மீது குத்தப்படும் முத்திரையும் நம்மை இந்நிலைக்கு இட்டுச் செல்லவில்லை. மலேசிய இந்தியர்கள் / தமிழர்கள் தாழ்ந்துபோன தரமும் இல்லை. நடப்பனவற்றைக் கண்டால் ஒருவேளை நம்மை நம்பக் கூடச் செய்துவிடும். அனைத்திற்கும் ஒரு நாட்டின் அரசியல் சார்ந்த பொருளாதாரமே காரணமென நான் துணிகிறேன்.
தொடர்ந்து வாருங்கள்…
திரு.நரகன்
பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?
வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்
மக்கள் சக்தியைக் காட்டுவோம்!
பாகான் பினாங்கில் தேசிய முன்னணி அல்லது பாஸ் (மக்கள் கூட்டணி) ஆகியவற்றிற்கு வாக்களிக்காதீர்கள்!
இதுவரையில் இரு அரசியல் கூட்டணிகளுமே இந்தியர்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
இந்தியர்கள், தாங்கள் வேண்டியதை, 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பெறவில்லை. இதுவே 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிந்திய நமது கருப்பொருள்.
இந்தியர்களை ஒதுக்கி வைத்தல், மற்றும் ஓரங்கட்டுதல் ஆகிய நடவடிக்கைகள், மக்கள் கூட்டணி ஆளும் 4 மாநிலங்களில் மேலும் துரிதமாகத் தொடர்கிறது. அம்னோ அரசு, தனது இனவாதக் கொள்கையை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு மனக்குமுறல்கள், மனவேதனைகள், ஒரு தீர்வின்றி அல்லலுறுகின்றன.
பினாங்கில் பொய் பேசும் DAP மாநில முதலமைச்சர், சில DAP இந்திய மண்டோர்கள், நிறைவேற்றப்படாத, சிதைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியனதான் உள்ள. இந்தியர்களின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையான புவா பாலா கிராம விசயத்தில், தன் கையை கழுவி, நழுவி விட்டது DAP.
PKR-இல், கோழைகள் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தியர்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இவர்கள் எங்கும் காணப்படுவதில்லை.

பேராக் மாநிலத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அதிகமான நிலங்கள் சீனர்களுக்காக மக்கள் கூட்டணி அரசாங்கம் வழங்கி உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட எந்தவொரு நிலமும் வழங்கப்படவில்லை. மக்கள் கூட்டணி அரசாளும் மாநிலங்களில் ஆலயங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் சமய சின்னங்களுக்கு கேடு செய்வது, இந்தியர்களை இழிவுபடுத்துவது, பரவாயில்லை என்று கூறுகிறார் உள்த்துறை அமைச்சரான அம்னோவின் இசாமுடின். இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கூட்டரசு அரசாங்கம் நான்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கூட்டணியை சாக்காக வைத்துக் கொண்டு, இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு ஒன்றுமே செய்யாமல், தனது மாறாத இனவாத கொள்கைகளைக் கொண்டு இந்தியர்களை மேலும் மேலும் ஒதுக்கி வைக்கின்றது.
இவை எல்லாம் ஏன் மென்மேலும் தொடர்கின்றன? காரணம், PKR, DAP, MIC, UMNO ஆகிய கட்சிகள் நம் வாக்குகளை மட்டும்தான் தேடுகின்றன. அவ்வளவுதான்! பதிலுக்கு மிகவும் அற்பமான, சில்லறையான பிச்சை போடுகிறார்கள். பள்ளிகளுக்கு மிகவும் அற்பமான, குறைந்த, பண உதவி, ஓரிரண்டு நிலங்கள் அல்லது சிறு சிறு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன, அவ்வளவுதான்! அவர்கள், நமக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பது போல தோன்ற வேண்டும், அல்லவா? அதற்காகத் தான் இந்த சொற்பமான உதவிகள் எல்லாம்! இவர்களைப் பொறுத்தவரையில், நாம் அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம் சமூகத்தின் நலனில் சில்லறைத் தனமும் அற்ப குணமும் கொண்டிருக்கின்றனர். ஆம்! அவர்களைப் பொறுத்தவரையில் நாம் மிகவும் அற்பமானவர்கள், அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம்மை அதிகம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை!
இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. இதுவே நமது கோரிக்கை. மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவைகளை முதலில் பார்ப்போம். பிறகு மற்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கலாம், கவனிக்கலாம், திட்டமிடலாம். இந்தியர்களிடையே நிலவும் குற்றச் செயல்கள், தற்கொலைகள், மதுபான பிரச்சனைகள், போதைபொருள் பாதிப்புகள், வேலை இல்லாத் திண்டாட்டம், வணிகர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த வாய்ப்புகள், அரசாங்க நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவது, ஆகியன நம்முடைய பெரும் பிரச்சனைகள். தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களும் நம்மை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. எனவேதான், நாம் கூறும் நமது பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வுகாண அவர்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இண்ட்ராஃப் முன்வைத்த 18 கோரிக்கைகள் மிகவும் தெளிவாக, இந்நாட்டு இந்தியர்களுக்கு என்ன தேவை என்பதனை எடுத்துரைக்கின்றன. நாம் இவ்வளவு கூறி இருந்தும் கூட இவ்விரு அரசாங்கங்களும் நம் பிரச்சனைகள் தொடர்பாக முழுமையான தீர்வை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளேதும் எடுக்கவில்லை.
நமக்கு இன்று இருக்கும் ஒரே வழி, அவர்களை எங்கு தீண்டினால் வலிக்குமோ, அங்கு தீண்டுவதுதான்.
நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அவர்களது அரசியல் கணிப்பில் நம்மையும் முக்கியமான தரப்பினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த கணிப்பின் ஒரு சோதனைக் களமாக, நமக்கு மாற்றங்கள் கொண்டு வரும் வகையில், பாகான் பினாங்கில் நமது வாக்குகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பாகான் பினாங்கு தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருப்பினும், அது நமக்கு எந்தவொரு முக்கிய மாற்றங்களையும் கொண்டு வராது.
நெகிரி செம்பிலானில் மேலும் ஒரு சட்டமன்ற இடம் குறைந்தாலோ, கூடினாலோ, தேசிய முன்னணியிலும் மக்கள் கூட்டணியிலும் ஏதும் பெரிதாக மாறிவிடாது. ஆனால், நாம் நமது வாக்குகளைத் தொட்டு எடுக்கும் முடிவு, நம் வாக்குகளின் மேல் ஆர்வம் உள்ளவர்களிடம் நமது வாக்குகளுக்கு மதிப்பு உண்டு என ஆழமான ஒரு கருத்தை சமர்ப்பிக்கலாம்.
இங்கு 14,192 வாக்காளர்கள் உள்ளனர். 80% வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாயின், 11,345 வாக்காளர்கள் தேர்தல் அன்று வருவர். இவர்களில் 66% அல்லது 7,500 மலாய் வாக்காளர்கள், 19.9% அல்லது 2270 இந்திய வாக்காளர்கள், 10.5% அல்லது 1135 சீன வாக்காளர்கள் இருப்பார்கள். கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் 6430 வாக்குகள் பெற்று, 2,333 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிப் பெற்றார். அதே தேர்தலில், பாஸ் வேட்பாளர் 4,097 அல்லது 39% வாக்குகளைப் பெற்றார். ஆனால் அது நடந்தது, இந்தியர்களும் சீனர்களும் பாரிசான் அரசாங்கத்தை அடியோடு வெறுத்த காலக்கட்டத்தில். இந்த உண்மையானது, வருகின்ற இடைத் தேர்தலில் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியுறும் அபாயத்தைப் பிரதிபலிக்கின்றது.
பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டும் நமக்கு நல்ல கட்சியாக அமையவில்லை. இதன் விளைவாக, மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலில் தோல்வியுறட்டும்! நம் வாக்குகளின் மூலம், நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். மக்கள் கூட்டணி நமது இந்த முக்கியமான கருத்தை தொடர்ந்து கண்டுகொள்ளாமல், ஒதுக்கி வைத்தால், அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளட்டும். இந்தியர்களின் வாக்கு முக்கியமானது என்றும், அந்த முக்கியமான வாக்குகளை அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வு தோன்றினால், அவர்கள் அதை செயலிலும் கட்சிக் கொள்கைகளிலும் காட்ட வேண்டும். வெற்றுப் பேச்சும், வெற்று வாக்குறுதிகளும் நமக்குத் தேவையில்லை.
அம்னோவை காட்டிலும், மக்கள் கூட்டணியைத்தான் நாம் விரும்புகிறோம். ஆனால், மக்கள் கூட்டணி செயலில் இறங்கி தங்களின் ஆட்சிக் கொள்கைகளின்வழி அவற்றை நிரூபித்தாலே ஒழிய, நாம் அவர்களுக்கு நமது ஆதரவை தர மாட்டோம்.
நாம் அவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – இரு வழிகளிலுமே!
நாம் இந்த கருத்தை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். நமது கருத்தை வெளிப்படுத்த இதுவே ஒரே வழி, இதுவே நமக்கு கிடைத்த வாய்ப்பு, சந்தர்ப்பம்!
ஆக்கம் :
-சுப்பிரமணிய பாரதி-
போராட்டம் தொடரும்…
உதட்டளவில் தேன் , உள்ளம் முழுதும் ஆலகால விசம்.
இதுதான் மலேசிய அரசு இந்நாட்டு இந்தியர்களின் பால் நடந்து கொள்ளும் விதம்!
ஓரே மலேசிய இனம் என்று அறிவித்த நாவில் எச்சில் காயும் முன் நம் பிரதமர் அறிமுகப்படுத்திய http://www.1malaysia.com.my எனும் அகப் பக்கத்தில் இந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய இனமாகிய இந்தியர்கள் பேசும் தமிழ் மொழிக்கு இடமில்லை !!!
பல்லினங்கள் வாழும் இத்திருநாட்டில் , அந்தந்த இனங்களின் மொழி , கலை , கலச்சாரம் , பண்பாடு , என அனைத்து அம்சங்களையும் மதித்து அங்கீகரிப்பதன் மூலமே ஒன்றினைந்த ஒரே மலேசிய இனத்த்தை உருவாக்க முடியும் என்பதை இந்த அரசாங்கம் பலமுறை மிக மிக சவுரியமாக மறப்பதை போல் நடித்து உரிமைகளை மறுப்பதை மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை !!
மொழி ஒர் இனத்தின் ஆனிவேர் , முதுகெலும்பு , அடையாளம் , எதிர் கால சந்ததியினரின் தொப்புள் கொடி என்பதை நன்கு அறிந்திருந்தும் இந்த அரசாங்கம் ஏன் இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய வம்சாவளியினரை கங்கனம் கட்டி வஞ்சிக்கிறது???
தமிழை ம்றுத்ததின் மூலம் இந்த அரசு நமக்கு உணர்த்துவதுதான் என்ன ? தேசிய நீரோட்டத்திற்க்கு இந்தியர்கள் தேவை இல்லையா ? அல்லது ஒரே மலேசிய இனம் இந்தியர்களின் புதைகுழியின் மீது புலரப்போகிறதா ???
ஆங்கிலம் , மலாய் , சீனம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழை மட்டும் குழித் தோண்டி புதைத்த காரணத்தை மலேசிய பிரதமர் இந்நாட்டு இந்தியர்களுக்கு விளக்கியே ஆக வேண்டும் !!
தெருவுக்கு ஓர் அரசு சாரா இந்தியர் இயக்கமும் , விகிதா சாரத்தை விஞ்சும் அரசியல் கட்சிகளும் இனம் புதைக்கப் படுவதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலமும் இந்நாட்டில் அரங்கேற்றம் கண்டு கொண்டிருப்பது இந்த இனதிற்க்கு என்றும் நீங்கா சாபக்கேடோ !!!!
நன்றி ,
சம்புலிங்கம்
கோலாலம்பூர்
இவ்வனைத்து கேள்விகளையும் சிந்திக்கையில், நம் மலேசிய சமூத்தின் அடிப்படை இயக்கத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் இக்கருத்துக்கு உடன்படுகிறீர்களோ இல்லையோ, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சமூக இயக்கத்தில் நிலவிவரும் அடிப்படைக் கோளாறுகள் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதுடன், ஏனைய பிரச்சனைகளைவிட இதுதான் முதன்மையான பிரச்சனையாகக் கருத வேண்டியுள்ளது.
குகனின் மரணமும் மற்ற பிரச்சனைகளைப் போலவே அதிகமான ஆர்பாட்டமும் குறைவான நடவடிக்கை அல்லது நடவடிக்கையே இல்லாது போய்விடுமா. நடப்பதனைத்தையும் கவனிக்கையில் குகனின் மரணமும் காலத்தால் மறக்கடிக்கப்படும் வகையில் சார்ந்திருப்பதாக எனக்குத் தென்படுகிறது – இவ்விடயத்தில் ஆத்திரமும், வெறுப்பும் என்னை ஆட்படுத்துகின்றன. ஆனால், இக்கூற்றைப் பொய்யாக்க முடியும். சரியான சிந்தனைக் கொண்ட மனிதர்கள் இருந்தால்,( நான் குறிப்பிடுவது மனிதர்களை மட்டுமே, மலாய், சீனர், இந்தியர்கள் என பாகுபடுத்திக் கூறவில்லை) இதுதான் சமயமென அனைவரும் ஒருமித்தக் குரலெழுப்பி காவல்த்துறையினரின் அராஜகம் இனிவருங்காலங்களில் தொடராதிருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவலாம்.

இவ்விவகாரம் உண்மையிலேயே ஒரு மலேசியனின் விவகாரம் என அனைவரும் சிந்தித்தால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் ( மாணிக்கவாசகம், மனோகரன், சிவராசா போன்றோர் அல்ல) காவல்த்துறை ஒழுங்கு குறித்த சுயேட்சை விசாரணைக் குழு அமைத்திட குரலெழுப்ப வேண்டும். இதனையே தேசிய முன்னணியின் பிரதிநிகளையும் செய்யச் சொல்லி நான் கூற விரும்பவில்லை, காரணம் அது பயனற்றது. என்னுடைய இக்கூற்று பொய் என்றால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி இவ்விடயம் குறித்து பேசப்படும்பொழுது தேசிய முன்னணியின் பிரதிநிகள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும்.
இவையனைத்தும் நடைப்பெறுவதற்குமுன் என்னுள் ஒரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் கூட்டணியால் இவ்விவகாரத்தை உண்மையிலேயே கையிலெடுத்து நல்லதொரு தீர்வு பிறக்கும்வரை போராட முடியுமா அல்லது தன்னுடைய அரசியல் லாபத்தை கணக்கிட்டபின் இதற்கு ஒரு முடிவு எடுப்பார்களா? சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா? குகனின் மரணத்தை ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்காது, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என உவமையாக்கி அவர்கள் பார்த்தால் நான் கூறியபடியே அவர்களின் நடத்தை வெளிப்படும்.
காத்திருந்து பார்ப்போம்…
(திரு.நரகன்)
இவ்வனைத்து கேள்விகளையும் சிந்திக்கையில், நம் மலேசிய சமூத்தின் அடிப்படை இயக்கத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் இக்கருத்துக்கு உடன்படுகிறீர்களோ இல்லையோ, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சமூக இயக்கத்தில் நிலவிவரும் அடிப்படைக் கோளாறுகள் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதுடன், ஏனைய பிரச்சனைகளைவிட இதுதான் முதன்மையான பிரச்சனையாகக் கருத வேண்டியுள்ளது.
குகனின் மரணமும் மற்ற பிரச்சனைகளைப் போலவே அதிகமான ஆர்பாட்டமும் குறைவான நடவடிக்கை அல்லது நடவடிக்கையே இல்லாது போய்விடுமா. நடப்பதனைத்தையும் கவனிக்கையில் குகனின் மரணமும் காலத்தால் மறக்கடிக்கப்படும் வகையில் சார்ந்திருப்பதாக எனக்குத் தென்படுகிறது – இவ்விடயத்தில் ஆத்திரமும், வெறுப்பும் என்னை ஆட்படுத்துகின்றன. ஆனால், இக்கூற்றைப் பொய்யாக்க முடியும். சரியான சிந்தனைக் கொண்ட மனிதர்கள் இருந்தால்,( நான் குறிப்பிடுவது மனிதர்களை மட்டுமே, மலாய், சீனர், இந்தியர்கள் என பாகுபடுத்திக் கூறவில்லை) இதுதான் சமயமென அனைவரும் ஒருமித்தக் குரலெழுப்பி காவல்த்துறையினரின் அராஜகம் இனிவருங்காலங்களில் தொடராதிருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவலாம்.

இவ்விவகாரம் உண்மையிலேயே ஒரு மலேசியனின் விவகாரம் என அனைவரும் சிந்தித்தால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் ( மாணிக்கவாசகம், மனோகரன், சிவராசா போன்றோர் அல்ல) காவல்த்துறை ஒழுங்கு குறித்த சுயேட்சை விசாரணைக் குழு அமைத்திட குரலெழுப்ப வேண்டும். இதனையே தேசிய முன்னணியின் பிரதிநிகளையும் செய்யச் சொல்லி நான் கூற விரும்பவில்லை, காரணம் அது பயனற்றது. என்னுடைய இக்கூற்று பொய் என்றால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி இவ்விடயம் குறித்து பேசப்படும்பொழுது தேசிய முன்னணியின் பிரதிநிகள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும்.
இவையனைத்தும் நடைப்பெறுவதற்குமுன் என்னுள் ஒரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் கூட்டணியால் இவ்விவகாரத்தை உண்மையிலேயே கையிலெடுத்து நல்லதொரு தீர்வு பிறக்கும்வரை போராட முடியுமா அல்லது தன்னுடைய அரசியல் லாபத்தை கணக்கிட்டபின் இதற்கு ஒரு முடிவு எடுப்பார்களா? சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா? குகனின் மரணத்தை ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்காது, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என உவமையாக்கி அவர்கள் பார்த்தால் நான் கூறியபடியே அவர்களின் நடத்தை வெளிப்படும்.
காத்திருந்து பார்ப்போம்…
(திரு.நரகன்)
நம்மிடையே நிலவிவரும் அதிருப்திகளுக்கு இக்கேள்விதான் அடிப்படைக் காரணம்! இதனைப் பின்புலமாகக் கொண்டே ஒவ்வொரு பிரச்சனையையும் குறித்த நம்முடைய புரிதலும் அணுகுமுறையும் இருக்க வேண்டும். நம் நாட்டின் சில அடிப்படை அரசு நிர்வாகக் கொள்கைகளில் மாற்றம் எற்படவேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். இந்த புரிதல் நம்மிடையே இல்லையேல், நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வுகளை மட்டுமே சிந்தித்து, முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு இருந்துவருமே ஒழிய நிரந்தர தீர்வுக்கு அவை நம்மை என்றும் இட்டுச் செல்லப் போவதில்லை! ஏற்றத்தாழ்வுகள் மிக்க அரசுக் கொள்கைகளில் சம உரிமையைத் தேடுவதற்கு இது ஒப்பாகும்.
இந்நாட்டின் தலையாய சட்டமானதும், மனித உரிமைகளுக்கும், சம உரிமைகளுக்கும் அறக்காவலனாக விளங்கிவருவதுமான மலேசிய அரசியலமைப்புச் சட்டமானது தொடர்ச்சியாக பங்கப்படுத்தப்பட்டு வருவதை எதிர்த்து முன்வைக்கப்பட்டவைதான் இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகள்! தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகள் கையாளப்பட்டு வருவதாலும், நாட்டின் வளப்பத்தை மக்களிடையே சரிசமமாகப் பங்கீடு செய்வதில் பாராபட்சம் காட்டப்பட்டு வருவதாலும், அரசியல் சாசனத்தின்மீது மக்களிடையே நம்பிக்கை அற்றுப்போனது மட்டுமல்லாது, மலேசியா ஒரு பல்லின மக்கள் கலவைக் கொண்ட, பல சமய நம்பிக்கைகள் புழங்கிவரும் நாடு எனும் கூற்று மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
நீங்கள் அக்கறையுள்ளவராக இருந்தால், இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகளை ஒருமுறை தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். இக்கோரிக்கைகளானது மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைப் பிரச்சனைகளைக் கோடிட்டு காட்டியிருந்தாலும், ஒரு நாட்டிற்கு அடிப்படைத் தேவைகளை ஆய்வு கண்ணோட்டத்தில் முழுமையான வடிவில் படம்பிடித்துக் காட்டியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள். தேசிய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே 18 அம்சக் கோரிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்! தேசிய கொள்கைகளில் நாம் புதிய அணுகுமுறைகள் கண்டால்தான் நாட்டு மக்களின் நலன்களை பேணுவதிலும், மக்களின் ஒட்டுமொத்த திறன்களை நாட்டு வளப்பத்திற்காகவும் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் முறையாகப் பயன்படுத்துவதில் வெற்றிகாண இயலும். நடைமுறை தேசியக் கொள்கைகள் இவைகளை வலியுறுத்தவில்லை என்பதே உண்மை!
தற்சமயம், மக்கள் கூட்டணியின் தலைமைத்துவமானது மலேசிய இந்தியர்களிடையே தலைதூக்கிவரும் பிரச்சனைகளை முழுமையானதொரு புரிதலோடு, அதனை பல்நோக்கு அணுகுமுறைகளின்வழி தீர்வுகாண வேண்டியது அவசியமாகிறது. மக்கள் கூட்டணியினர் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை கேட்டு புரிந்து கொண்டு, அதற்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பலனை விளைவிப்பதாயும் இருத்தல் மிக அவசியம். மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள் தலைமைத்துவத்தோடு சந்திப்பு கூட்டங்கள் நடத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். இவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 18 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி தேசியக் கொள்கைகளில் தெள்ளத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு மக்கள் கூட்டணியின் தலைமைத்துவம் இணங்கும் வரையில், இந்தியப் பிரதிநிகள் கூட்டணியிலிருந்து விலகாதிருக்க வேண்டும். இந்தியர்களின் 18 அம்சக் கோரிக்கைகளைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்ட பின்பே எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும். இதுதான் அனைத்து மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பும்!
ஒன்று, மேற்கூறிய கருத்துகளின் சாரத்தை நாம் நன்கு உணர்ந்து தக்க நடவடிக்கையில் இறங்க வேண்டும்! இல்லையேல், சரித்திரம் நம்மை மிதித்துச் சென்றுவிடும்!
ஒன்றுபடுவோம்!
ஒன்றாய் செயல்படுவோம்!
ஆக்கம் : திரு.நரகன்
மூலம் : ஆங்கிலக் கட்டுரை ( Should the PR representatives leave? )
போராட்டம் தொடரும்…
நம்மிடையே நிலவிவரும் அதிருப்திகளுக்கு இக்கேள்விதான் அடிப்படைக் காரணம்! இதனைப் பின்புலமாகக் கொண்டே ஒவ்வொரு பிரச்சனையையும் குறித்த நம்முடைய புரிதலும் அணுகுமுறையும் இருக்க வேண்டும். நம் நாட்டின் சில அடிப்படை அரசு நிர்வாகக் கொள்கைகளில் மாற்றம் எற்படவேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். இந்த புரிதல் நம்மிடையே இல்லையேல், நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வுகளை மட்டுமே சிந்தித்து, முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு இருந்துவருமே ஒழிய நிரந்தர தீர்வுக்கு அவை நம்மை என்றும் இட்டுச் செல்லப் போவதில்லை! ஏற்றத்தாழ்வுகள் மிக்க அரசுக் கொள்கைகளில் சம உரிமையைத் தேடுவதற்கு இது ஒப்பாகும்.
இந்நாட்டின் தலையாய சட்டமானதும், மனித உரிமைகளுக்கும், சம உரிமைகளுக்கும் அறக்காவலனாக விளங்கிவருவதுமான மலேசிய அரசியலமைப்புச் சட்டமானது தொடர்ச்சியாக பங்கப்படுத்தப்பட்டு வருவதை எதிர்த்து முன்வைக்கப்பட்டவைதான் இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகள்! தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகள் கையாளப்பட்டு வருவதாலும், நாட்டின் வளப்பத்தை மக்களிடையே சரிசமமாகப் பங்கீடு செய்வதில் பாராபட்சம் காட்டப்பட்டு வருவதாலும், அரசியல் சாசனத்தின்மீது மக்களிடையே நம்பிக்கை அற்றுப்போனது மட்டுமல்லாது, மலேசியா ஒரு பல்லின மக்கள் கலவைக் கொண்ட, பல சமய நம்பிக்கைகள் புழங்கிவரும் நாடு எனும் கூற்று மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
நீங்கள் அக்கறையுள்ளவராக இருந்தால், இண்ட்ராஃபின் 18 அம்சக் கோரிக்கைகளை ஒருமுறை தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். இக்கோரிக்கைகளானது மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைப் பிரச்சனைகளைக் கோடிட்டு காட்டியிருந்தாலும், ஒரு நாட்டிற்கு அடிப்படைத் தேவைகளை ஆய்வு கண்ணோட்டத்தில் முழுமையான வடிவில் படம்பிடித்துக் காட்டியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள். தேசிய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே 18 அம்சக் கோரிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்! தேசிய கொள்கைகளில் நாம் புதிய அணுகுமுறைகள் கண்டால்தான் நாட்டு மக்களின் நலன்களை பேணுவதிலும், மக்களின் ஒட்டுமொத்த திறன்களை நாட்டு வளப்பத்திற்காகவும் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் முறையாகப் பயன்படுத்துவதில் வெற்றிகாண இயலும். நடைமுறை தேசியக் கொள்கைகள் இவைகளை வலியுறுத்தவில்லை என்பதே உண்மை!
தற்சமயம், மக்கள் கூட்டணியின் தலைமைத்துவமானது மலேசிய இந்தியர்களிடையே தலைதூக்கிவரும் பிரச்சனைகளை முழுமையானதொரு புரிதலோடு, அதனை பல்நோக்கு அணுகுமுறைகளின்வழி தீர்வுகாண வேண்டியது அவசியமாகிறது. மக்கள் கூட்டணியினர் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்புகளை கேட்டு புரிந்து கொண்டு, அதற்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பலனை விளைவிப்பதாயும் இருத்தல் மிக அவசியம். மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள் தலைமைத்துவத்தோடு சந்திப்பு கூட்டங்கள் நடத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். இவர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 18 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி தேசியக் கொள்கைகளில் தெள்ளத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு மக்கள் கூட்டணியின் தலைமைத்துவம் இணங்கும் வரையில், இந்தியப் பிரதிநிகள் கூட்டணியிலிருந்து விலகாதிருக்க வேண்டும். இந்தியர்களின் 18 அம்சக் கோரிக்கைகளைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்ட பின்பே எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும். இதுதான் அனைத்து மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பும்!
ஒன்று, மேற்கூறிய கருத்துகளின் சாரத்தை நாம் நன்கு உணர்ந்து தக்க நடவடிக்கையில் இறங்க வேண்டும்! இல்லையேல், சரித்திரம் நம்மை மிதித்துச் சென்றுவிடும்!
ஒன்றுபடுவோம்!
ஒன்றாய் செயல்படுவோம்!
ஆக்கம் : திரு.நரகன்
மூலம் : ஆங்கிலக் கட்டுரை ( Should the PR representatives leave? )
போராட்டம் தொடரும்…

தொழிற்சங்க போராட்டவாதி கணபதியின் மறு அவதாரமாக இண்ட்ராஃப் எனும் இயக்கத்தின்வழி மலேசியத் தமிழர்களிடையே போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திய வழக்கறிஞர் திரு.உதயகுமார் அவர்களுக்கு நாளைப் பிறந்த நாள்.
மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காக உரிமைக் குரல் கொடுத்த அந்த நல்ல மனிதர் இன்று சிறையில் வாடுகிறார்.
அவரின் பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் மலேசியத் தமிழர்கள் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. அவர் நமக்காகச் செய்த தியாகங்களுக்கு நன்றியறிதல் உடைய சமுதாயமாக நாம் இருக்க வேண்டும். சுகமான வாழ்க்கை, பாசமிக்கக் குடும்பம், தொழில் என அனைத்தையும் சில காலங்கள் துறந்து சிறை வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் அவரும், இயக்கம் தடைச் செய்யப்பட்டக் கவலையில் மக்களும் இருந்தாலும் உணர்வுகள் இன்னும் தடைப்பட்டு போகவில்லை! அந்த மகத்தான சோதியை உள்ளத்தில் அணைய விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
திரு.உதயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வாசகர்கள் கவிதைகளோ, உரைவீச்சோ அல்லது கட்டுரையோ படைத்து நீங்கள் விரும்பும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கலாமே. உதயாவின் பிறந்தநாளையொட்டி ஓலைச்சுவடிக்கு ஏதெனும் படைப்புகள் அனுப்ப எண்ணினால் olaichuvadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
இது நாம் அவர்மீது காட்டும் நன்றியறிதலை வெளிப்படுத்தும் ஒரு சிறு முயற்சிதான்..