புவா பாலா ஓவியக் கண்காட்சி

திசெம்பர் 21, 2009

முத்தியாரா ஓவியக் கண்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நேற்றுபுவா பாலா நினைவலைகள்எனும் கருப்பொருளை தாங்கிய ஓவியக் கண்காட்சி தொடங்கியது. 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை நடைப்பெறவுள்ள இக்கண்காட்சியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். பினாங்கு இந்தியர்களின் பாரம்பரிய கிராமமான புவா பாலாவை கடந்த செப்தெம்பர் மாதமன்று மாநில அரசாங்கம் மற்றும் மேம்பாட்டாளர்கள் இணைந்து தரைமட்டமாக்கி அங்குள்ள மக்களை விரட்டியடித்தனர். இதன்வழி அங்கு பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஆடம்பர அடுக்குமாடி கட்டிட பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

200 ஆண்டுகளாய் பிரவுன் தோட்டத்தில் வியர்வையையும் உதிரத்தையும் உதிர்த்து வாழ்ந்த இந்திய மக்களுக்காக கொடுக்கப்பட்ட 6.2 ஏக்கர் நிலமும் அங்கு படர்ந்திருந்த பசுமையும், இயற்கையாய் தேங்கியிருந்த நிலத்தடி நீரும் முற்றிலும் அழிக்கப்பட்டதன் வழி ஒரு சரித்திரம் நம் புறக்கண்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அச்சரித்திர சான்றுகள் இன்று ஓவியங்களின் வடிவில் உயிர்தெழுந்து நம் உணர்வலைகளை தட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கின்றன.

அப்பாரம்பரிய கிராமம் உடைபடுவதற்கு ஒருவாரம் முன்பாக, 13 ஓவியக் கலைஞர்கள் அக்கிராமத்தின் உயிரோட்டத்தை தூரிகையியால் வார்த்தெடுத்த ஓவியங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கண்காட்சியினை முனைவர் டத்தோ அன்வார் ஃபசால் அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்து வைத்தார். அந்நிகழ்வின் காணொளி காட்சி கீழே :

முத்தியாரா ஓவியக்கண்காட்சியகத்தின் முகவரி :

118, Lebuh Armenian,
10200 Pulau Pinang, Malaysia.

அலைப்பேசி எண்கள் : 604-262 0167


நடிகர் நாகேசு இன்று காலமானார்!

ஜனவரி 31, 2009

தமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை சிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.

சர்வர் சுந்தரம் (நகைச்சுவை)

நடிகர் நாகேசு இன்று காலமானார்!

ஜனவரி 31, 2009

தமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை சிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.

சர்வர் சுந்தரம் (நகைச்சுவை)

கல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு!

ஓகஸ்ட் 13, 2008

அன்று….

கல்லிலே கலை வண்ணம் கண்டவர்களில் பெயர்ப்போனவர்கள் தமிழர்கள். ஆயக் கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான சிற்பக் கலையின் பிறப்பிடமே தமிழகம்தான் என்று கூறும் அளவிற்கு, ஆயிரக்கணக்கான பழங்கால கலைப்படைப்புகள் தங்களிடமுள்ள உயிர்ப்பையும் வனப்பையும் இன்றளவிலும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன. கலைகளின் பொற்காலம் எனக் கருதப்படும் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி வடதமிழகத்தில் கோலோச்சி இருந்த சமயம், முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்(1) எனும் அரசன் மாமல்லபுரத்தில்(2) குடவரைக் கோயில்களை(3) எழுப்பி சிற்பக் கலைக்கோர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். இவன் ஆட்சிக் காலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய பெருஞ்சமயங்கள் பரஸ்பரம் பெற்றுத் திகழ்ந்ததோடல்லாமல், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் சிற்பக் கலை, நடனக் கலை, ஓவியக் கலை ஆகியவற்றைப் பேணிக்காக்கும் ஒருக் கலைக்கூடமாக அன்று செழிப்புற்றிருந்தன.

குடைவரைக் கோயில்கள் – மாமல்லபுரம்

ஒற்றைக் கல் யானை, ஒற்றைக்கல் தளி – மாமல்லபுரம்

முதலாம் மகேந்திரவர்மனுக்கு அடுத்து பல்லவ பட்டத்து அரியணையில் ஏறிய முதலாம் நரசிம்மவர்மன்(4), வாதாபி மன்னன் இரண்டாம் புலகேசியைக் கொன்று, வாதாபியை வென்று, பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மேலைசாளுக்கியம் வரை விஸ்தரித்து மாமல்லன்(5) என்றப் பெயரோடு திகழ்ந்தான். ஆனால் அவனுக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தவை போர்களின் வீரசாகசங்கள் அல்ல, மாற்றாக அவன் சிற்பக் கலைகளுக்குச் செய்த சேவையே நிலையான புகழை ஈட்டித் தந்தன.

குடைவரைக் கோயில் – மாமல்லபுரம்



பகீரதன் தபசு அல்லது அர்சுன தபசு (புடைப்புச் சிற்பங்கள்) – மாமல்லபுரம்

இன்றளவிலும் காலத்தால் அழியாத மாமல்லபுரப் புடைப்புச் சிற்பங்களும்(6), குடைவரக் கோயில்களும், ஒற்றைக்கல் தளிகளும்(7) நரசிம்மவர்ம பல்லவனின் புகழ்பாடும் சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இவன் காலத்தில்தான், பல்லவப் போர்ப் படையின் தளபதியாக விளங்கிய பரஞ்சோதி(8) வாதாபியை வெற்றிக் கண்டதும், அங்கு பரவலாக வணங்கப்பட்ட கணபதி சிலையை முதன்முதலாக தமிழகத்திற்குக் கொண்டு வந்து, திருசெங்காட்டங்குடி எனும் ஊரில் பிரதிட்டை செய்தார். அதற்கு முன்பு தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்பது வரலாற்று ஆய்வாளார்களின் கருத்து. மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற புடைப்புச் சிற்பங்கள் கொண்ட பாறை ஒன்று உள்ளது. வெடிப்பு ஏற்பட்டு இரண்டாகக் காட்சியளிப்பதுபோல் இருக்கும் அந்த மாபாறையின் பெயர் அருச்சுனன் தபசு. இப்பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அருச்சுனன் சிவபெருமானை நோக்கி, பாசுபத அசுத்திரம் பெற வேண்டி ஒற்றைக் காலில் தவம் செய்வதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் பாறையில் ஏற்பட்ட வெடிப்பு ஊனமாகத் தெரிந்தாலும் அதனையும் கலைநயத்தோடு ஒரு ஆறாக வடிவது போல அந்த வெடிப்பைச் சித்தரித்து ஊனத்தை நீக்கியிருக்கிறார்கள் பண்டைய தமிழக சிற்பிகள். ஒற்றைக் காலில் தவம் புரியும் அந்த மனிதன் அருச்சுனன் அல்ல, ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி பகீரதன் புரியும் தவம் என்பதே உண்மை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இப்பாறையை பகீரதன் தபசு எனவும் குறிப்பிடுகின்றனர். இப்பாறையில் ஒரு பூனையும் ஒற்றைக் காலில் தவம் புரிவதுபோலும், சில எலிகள் அப்பூனையைக் கவனிப்பதுபோலவும் நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.

பெரும்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் – மாமல்லபுரம்

ஒற்றைக் கல் தளி – மாமல்லபுரம்

வரலாற்றில் தமிழர்களின் மற்றுமொரு உன்னதக் கலைப்படைப்பின் விருந்தாக அமைவது, தஞ்சையில்(9) உள்ள இராசராசேச்சுரம் திருகற்றளி அல்லது தஞ்சை பெருவுடையார் ஆலயமாகும். தற்போது பிரகதீசுவரர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில் எனும் பெயர்களால் இக்கலைச்சின்னம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் உலகின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இராசராசேச்சுரம் (தஞ்சை பெரிய கோயில்) – தஞ்சாவூர்

உலகமே இன்று வியந்து நிற்கும் இம்மாபெரும் திருகற்றளியை எழுப்பியவர், அருள்மொழிவர்மன் எனும் இயற்பெயர்கொண்ட முதலாம் இராசராசசோழ தேவர் ஆவார். இவர் ஆட்சி நடைப்பெற்றக் காலம் (கி.பி 985 – கி.பி 1012), தமிழகத்தின் பொற்காலம் என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும், வளர்ந்து வரும் வசதிக்கும், ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராசராசசோழ தேவர் கட்ட நினைத்தார் போலும். 216 அடிகள் உயரமுள்ள கோயில் விமானத்தை நவீன தொழில்நுட்பம் ஏதும் இல்லாத அக்காலத்தில் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று ஆராய்சியாளர்களும், இக்கோயிலை காண வருகின்றவர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இராசராசேச்சுரம் விமானத்தை அமைப்பதற்கு, விமானத் தளத்தை நோக்கி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிருந்து ஒரு செங்குத்தான பாலம் ஒன்றை கட்டி, அதில் யானைகளைக் கொண்டு டன் கணக்கிலான கற்களை ஏற்றிச் சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாலம் தொடங்கப்பட்ட இடத்தினையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோயிலின் மற்றுமொருச் சிறப்பு, அங்கு வீற்றிருக்கும் நந்தி சிலையாகும். இக்கோயில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். நந்திச் சிலை குடிகொண்டிருக்கும் மண்டபமானது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில் நந்தி – தஞ்சாவூர்

முதலாம் இராசராசசோழ தேவருக்குப் பின் அரியணைக் கண்டவன், அவரின் புதல்வனான முதலாம் இராசேந்திர சோழனாவான். இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம் (மலேசியா), சிறீவிசயம், சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் – கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரியக் கோயிலையொத்த வடிவமைப்பைச் சார்ந்து இருந்தாலும், கட்டிட அமைப்பில் பெண்மையின் மென்மையையும் அழகையும் புகுத்தி தனக்கென்று ஒரு சிறப்பைப் பெற்றிருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் ஆண் என்றால், கங்கை கொண்ட சோழீச்சுரம் பெண் எனக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுரம். கோயில் கட்டிட அமைப்பில் நேர்க்கோடுகளுக்கு பதில் வளைகோடுகள் கையாளப்பட்டிருப்பதினால்தான் இக்கோயில் பெண்மையின் அம்சங்களைப் பறைச்சாற்றுகிறது. தஞ்சை பெரிய கோயிலைவிட, கங்கை கொண்ட சோழீச்சுர கோயிலைப் பொலிவுப்படுத்துவத்தில் இராசேந்திரன் முனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று….

இத்தனைச் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கியிருக்கும் தமிழர் சிற்ப, கட்டிடக் கலையின் பெருமையை மீண்டும் பறைச்சாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது நமக்கு வாய்த்துள்ளது. இந்த வாய்ப்பை முழுமையாக தமிழர்கள் தமிழர்களுக்காக பயன்படுத்திக் கொள்ள, இத்தனைக் காலம் பூமிக்கடியில் புதைந்திருந்த ரகசியத்தை தமிழன்னை வெளிக்கொணர்ந்திருக்கிறாள். தொடந்து வாசியுங்கள்…

ஒரேக் கல்லில் ஒரு பெரிய நகரத்தையே உருவாக்குவது சாத்தியமா? சமீபத்தில் தஞ்சைக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வந்த ஒரு கோரிக்கை மனுதான் இந்த அதிசயத்தைச் சுமந்து நிற்கிறது. இந்த மனுவைக் கொடுத்தவர் ஆ.அரசு.

தமிழ் மரபுக் கட்டிடக் கலைஞரான இவர் வழக்கறிஞரும்கூட. ‘காய்-கனி களஞ்சிய குளிர்பதனக் கிடங்கை மரத்தால் அமைக்கலாம் எனக் கண்டுபிடித்துச் சொன்னதற்காக இவர் மத்திய அரசின் நிதியைப் பெற்றவர். இத்திட்டம் தற்போது உலகப் பொருளகத்தின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்விக்கு அரசு எடுத்ததுமே, “அந்தப் பாறை தமிழகத்தில் முக்கியமான ஓர் இடத்தில் இருக்கிறது. அது பற்றிய விவரங்களை நான் தற்போது யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்பவில்லை” என்று ஆரம்பித்தார்.

“சில மாதங்களுக்கு முன் என் பிறந்தநாளையொட்டி ஒரு கோயிலுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வரும்போதுதான் அந்த பிரம்மாண்டமான பாறையைப் பார்த்தேன். அதன் மீது ஏறிப் பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே கல் பாறையாகக் காட்சி அளித்தது. இதுபற்றி அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தபோது நிறைய உபரி தகவல்கள் கிடைத்தன. காரில் அந்தப் பாறையைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தபோதும் முழுமையாகப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாய் இருந்தது.

அதைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி, முதல்வர் தஞ்சை வந்தபோது அவரிடம் கோரிக்கை மனுக் கொடுத்தேன். வேறு எங்குமே காண முடியாத அந்தப் பாறை தமிழகத்தில் இருப்பதே நமக்குக் கிடைத்த வரம். இத்தனை நாட்களாக இதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருக்கிறோம். இந்தப் பாறையின் நீளம் ஐந்து கிலோ மீட்டர், உயரம் ஆயிரம் அடி, மொத்தம் 45 கோடி கன மீட்டர், உள்பரப்பு மட்டுமே 25 சதுர கிலோ மீட்டர்,. இந்த ஒற்றைக் கல் பாறையின் மூன்றில் இரண்டு பகுதி பூமிக்கு வெளியே இருக்கிறது. ஒரு பகுதி பூமிக்கு கீழே உள்ளது. இந்தப் பாறை ‘கிரானைடு’ வகையைச் சேர்ந்தது.

புவியியலின்படி காலத்தால் மிகத் தொன்மையான இது மிக அரிதான கடினப் பாறை. அசுந்தா, எல்லோரா குகைகள், புத்தரின் பல நூறு அடி உயரச் சிலை உள்ள ஆப்கனின் பாமியான் குன்றுகளை நான் சொல்லும் ஒற்றைக் கல் பாறையோடு ஒப்பிடலாம். ஆனால் அவை எல்லாம் பல நூறு கற்பலகை இணைந்து உருவான குன்றுகள். இவற்றில் எதுவுமே ஒற்றைக்கல் கிடையாது. நான் குறிப்பிடும் ஒற்றைக் கல் பாறை உலகின் முதல் பேரதிசயம்! தமிழ்த் தாயின் அரிய கருவூலம். இந்த வைரக்கல்லைப் பட்டை தீட்டி உலகின் பார்வைக்கு வழங்கும் கடமை நமக்கு இருக்கிறது.

மலை வடிவமாக இருக்கும் இந்த ஒற்றைக் கல் பாறையைக் கலை வடிவமாக மாற்ற முடியும். இந்தப் பாறையைக் குடைந்து இதனுள் ஓர் ஊரையே உருவாக்க முடியும். தஞ்சைப் பெரிய கோயிலைப் போல நான்கு மடங்கு உயரக் கோயில் குடையலாம். இந்திய நாடாளுமன்றத்தை விட மிகப் பெரிய அழகிய கூடம் பல கட்டலாம். பல குடைவரைக் கோயில்கள் அமைக்கலாம். நூறு அடி உயரமுள்ள கற்படிமம் பல ஆயிரம் வடிக்கலாம். சங்கத் தமிழ் இலக்கிய வரி அனைத்தையும் இங்கே முப்பரிமாண படைப்பு ஓவியமாக வடிக்கலாம். 1330 திருக்குறட்களை ஓவியம் ஆக்கலாம். மனித வரலாற்றை, புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ‘எல்லாம் காட்சிப் படிமம் ஆக்கலாம்’ இப்படி அரசு சொல்லிக் கொண்டே போகிறார்.

“ஒற்றைக் கல் பாறையைக் குடையும்போது கிடைக்கும் நாற்பதாயிரம் தூண்களில் புகழ் பெற்ற உலகத் தலைவர்களின் உருவச் சிலைகளைச் செதுக்கலாம். இதற்காக அரசு பத்து காசு செலவு செய்ய வேண்டியதில்லை. பாறையைக் குடையும்போது பல லட்சம் லாரி மணல், சல்லி கற்கள் கிடைக்கும். அதை விற்பனை செய்யும் போது 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். திட்டச் செலவுகள் நூறு கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 400 கோடி ரூபாய் அரசுக்கு ஆதாயம்தான். அதனால் இந்தப் பாறையை மாநில அரசு தன் அரிய வகைக் கருவூலமாக அறிவித்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

பல்லவர், சோழர், பாண்டியர் கால கட்டிடங்களை, சிற்பங்களை இப்போதும் நாம் கண்டு வியக்கிறோம்.. அத்தகைய கலைவடிவங்களை வடிக்கும் கலை நுட்ப அறிவு இப்போதும் நம்மிடையே இருக்கிறது. ஒரு கட்டிடம் அது கட்டப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவை, பண்பாட்டை, கலையை பிற்காலத்தில் மக்களுக்குக் காட்டும் வரலாற்று நினைவுப் பெட்டகம். நாமும் நம்முடையச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் வகையில் அரிய ஒற்றைக் கல் பாறை நம்மிடம் இருக்கிறது.

இந்த விடயங்களை எல்லாம் முதல்வருக்கு அளித்த மனுவில் சொல்லியிருக்கிறேன். தமிழை, தமிழரை, தமிழரின் பண்பாட்டை, கலையைத் தன் உயிர் மூச்சாகக் கருதும் முதல்வர் ஒற்றைக் கல் சிற்பக் கலை நகரை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தப் பாறை ‘கிரானைடு’ வகையைச் சேர்ந்தது என்பதால் இதற்குப் பல பெரும்புள்ளிகள் குறிவைத்திருக்கிறார்கள்.. பாறை இருக்குமிடத்தை நான் சொல்லிவிட்டால், அதற்குப் பலரும் உரிமைக் கொண்டாடுவார்கள். அதனால்தான் அது இருக்கும் இடத்தை யாரிடமும் நான் சொல்லவில்லை என்கிறார் அரசு.

இந்தத் திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரசு. இதற்காக வி.ஐ.பி கவிஞர் மூலமாக பேசி வருகிறார். அதே நேரம் அந்தப் பாறையின் முழுப் பரிணாமத்தையும் சுழலுந்து உதவியோடு ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து, அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் பணியிலும் இறங்கியிருக்கிறார் அரசு.

தமிழர்களின் பெருமையை மறக்கடிக்கும் வேலைகள் பல ஆங்காங்கே நடந்தாலும், அவற்றைப் புறக்கணித்து தமிழரின் தொன்மையை, சிறப்பை உலகிற்கு கலைநயத்துடன் வெளிக்கொணர நல்லதொரு வாய்ப்பை தமிழன்னை நமக்கு வழங்கியிருக்கிறாள். பூமிக்கும் பாதகமில்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கேடுவிளைவிக்காது, முறையான ஆராய்ச்சிகளுக்குப்பின் இம்மாபெரும் திட்டம் விரைவில் செயல் வடிவம் காண வேண்டும் என தமிழர்கள் அனைவரும் மனதார வாழ்த்திடுவோம். கல்லிலே கலைவண்ணம் கானத் துடிக்கும் ஆ.அரசுவின் கனவு பலித்திட வாழ்த்துகள்.

Get this widget | Track details | eSnips Social DNA

சில தகவல்கள் :-

(1) மகேந்திரவர்மப் பல்லவன் (கி.பி. 600 முதல் 630 வரை)

(2) மாமல்லபுரத்தில் (தற்போதைய மகாபலிபுரம்)

(3) குடவரைக் கோயில்களை (மாபெரும் பாறைகளைக் குடைந்து எழுப்பப்படும் ஆலயங்கள்)

(4) முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630 – 668 வரை) இவனின் மற்றொரு பெயர் ‘மாமல்லன்’

(5) மாமல்லன் (சிறந்த மல்யுத்த வீரன்)

(6) புடைப்புச் சிற்பங்கள் (நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தவை.)

(7) ஒற்றைக்கல் தளி (ஒரே பாறையைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆலயம்)

(8) பரஞ்சோதி (இவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவரை சிறுத்தொண்ட நாயனார் என அழைப்பர்.)

(9) தஞ்சை (தற்போது தஞ்சாவூர்)

மேற்கோள்கள் :-

1 ) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

2) http://en.wikipedia.org/wiki/Chola

3) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

4)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

5) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

6) நயனம் : 21 பார்வை : 32 – பக்கம் 23


கல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு!

ஓகஸ்ட் 13, 2008

அன்று….

கல்லிலே கலை வண்ணம் கண்டவர்களில் பெயர்ப்போனவர்கள் தமிழர்கள். ஆயக் கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான சிற்பக் கலையின் பிறப்பிடமே தமிழகம்தான் என்று கூறும் அளவிற்கு, ஆயிரக்கணக்கான பழங்கால கலைப்படைப்புகள் தங்களிடமுள்ள உயிர்ப்பையும் வனப்பையும் இன்றளவிலும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன. கலைகளின் பொற்காலம் எனக் கருதப்படும் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி வடதமிழகத்தில் கோலோச்சி இருந்த சமயம், முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்(1) எனும் அரசன் மாமல்லபுரத்தில்(2) குடவரைக் கோயில்களை(3) எழுப்பி சிற்பக் கலைக்கோர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். இவன் ஆட்சிக் காலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய பெருஞ்சமயங்கள் பரஸ்பரம் பெற்றுத் திகழ்ந்ததோடல்லாமல், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் சிற்பக் கலை, நடனக் கலை, ஓவியக் கலை ஆகியவற்றைப் பேணிக்காக்கும் ஒருக் கலைக்கூடமாக அன்று செழிப்புற்றிருந்தன.

குடைவரைக் கோயில்கள் – மாமல்லபுரம்

ஒற்றைக் கல் யானை, ஒற்றைக்கல் தளி – மாமல்லபுரம்

முதலாம் மகேந்திரவர்மனுக்கு அடுத்து பல்லவ பட்டத்து அரியணையில் ஏறிய முதலாம் நரசிம்மவர்மன்(4), வாதாபி மன்னன் இரண்டாம் புலகேசியைக் கொன்று, வாதாபியை வென்று, பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மேலைசாளுக்கியம் வரை விஸ்தரித்து மாமல்லன்(5) என்றப் பெயரோடு திகழ்ந்தான். ஆனால் அவனுக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தவை போர்களின் வீரசாகசங்கள் அல்ல, மாற்றாக அவன் சிற்பக் கலைகளுக்குச் செய்த சேவையே நிலையான புகழை ஈட்டித் தந்தன.

குடைவரைக் கோயில் – மாமல்லபுரம்



பகீரதன் தபசு அல்லது அர்சுன தபசு (புடைப்புச் சிற்பங்கள்) – மாமல்லபுரம்

இன்றளவிலும் காலத்தால் அழியாத மாமல்லபுரப் புடைப்புச் சிற்பங்களும்(6), குடைவரக் கோயில்களும், ஒற்றைக்கல் தளிகளும்(7) நரசிம்மவர்ம பல்லவனின் புகழ்பாடும் சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இவன் காலத்தில்தான், பல்லவப் போர்ப் படையின் தளபதியாக விளங்கிய பரஞ்சோதி(8) வாதாபியை வெற்றிக் கண்டதும், அங்கு பரவலாக வணங்கப்பட்ட கணபதி சிலையை முதன்முதலாக தமிழகத்திற்குக் கொண்டு வந்து, திருசெங்காட்டங்குடி எனும் ஊரில் பிரதிட்டை செய்தார். அதற்கு முன்பு தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்பது வரலாற்று ஆய்வாளார்களின் கருத்து. மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற புடைப்புச் சிற்பங்கள் கொண்ட பாறை ஒன்று உள்ளது. வெடிப்பு ஏற்பட்டு இரண்டாகக் காட்சியளிப்பதுபோல் இருக்கும் அந்த மாபாறையின் பெயர் அருச்சுனன் தபசு. இப்பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அருச்சுனன் சிவபெருமானை நோக்கி, பாசுபத அசுத்திரம் பெற வேண்டி ஒற்றைக் காலில் தவம் செய்வதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் பாறையில் ஏற்பட்ட வெடிப்பு ஊனமாகத் தெரிந்தாலும் அதனையும் கலைநயத்தோடு ஒரு ஆறாக வடிவது போல அந்த வெடிப்பைச் சித்தரித்து ஊனத்தை நீக்கியிருக்கிறார்கள் பண்டைய தமிழக சிற்பிகள். ஒற்றைக் காலில் தவம் புரியும் அந்த மனிதன் அருச்சுனன் அல்ல, ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி பகீரதன் புரியும் தவம் என்பதே உண்மை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இப்பாறையை பகீரதன் தபசு எனவும் குறிப்பிடுகின்றனர். இப்பாறையில் ஒரு பூனையும் ஒற்றைக் காலில் தவம் புரிவதுபோலும், சில எலிகள் அப்பூனையைக் கவனிப்பதுபோலவும் நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.

பெரும்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் – மாமல்லபுரம்

ஒற்றைக் கல் தளி – மாமல்லபுரம்

வரலாற்றில் தமிழர்களின் மற்றுமொரு உன்னதக் கலைப்படைப்பின் விருந்தாக அமைவது, தஞ்சையில்(9) உள்ள இராசராசேச்சுரம் திருகற்றளி அல்லது தஞ்சை பெருவுடையார் ஆலயமாகும். தற்போது பிரகதீசுவரர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில் எனும் பெயர்களால் இக்கலைச்சின்னம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் உலகின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இராசராசேச்சுரம் (தஞ்சை பெரிய கோயில்) – தஞ்சாவூர்

உலகமே இன்று வியந்து நிற்கும் இம்மாபெரும் திருகற்றளியை எழுப்பியவர், அருள்மொழிவர்மன் எனும் இயற்பெயர்கொண்ட முதலாம் இராசராசசோழ தேவர் ஆவார். இவர் ஆட்சி நடைப்பெற்றக் காலம் (கி.பி 985 – கி.பி 1012), தமிழகத்தின் பொற்காலம் என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும், வளர்ந்து வரும் வசதிக்கும், ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராசராசசோழ தேவர் கட்ட நினைத்தார் போலும். 216 அடிகள் உயரமுள்ள கோயில் விமானத்தை நவீன தொழில்நுட்பம் ஏதும் இல்லாத அக்காலத்தில் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று ஆராய்சியாளர்களும், இக்கோயிலை காண வருகின்றவர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இராசராசேச்சுரம் விமானத்தை அமைப்பதற்கு, விமானத் தளத்தை நோக்கி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிருந்து ஒரு செங்குத்தான பாலம் ஒன்றை கட்டி, அதில் யானைகளைக் கொண்டு டன் கணக்கிலான கற்களை ஏற்றிச் சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாலம் தொடங்கப்பட்ட இடத்தினையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோயிலின் மற்றுமொருச் சிறப்பு, அங்கு வீற்றிருக்கும் நந்தி சிலையாகும். இக்கோயில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். நந்திச் சிலை குடிகொண்டிருக்கும் மண்டபமானது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில் நந்தி – தஞ்சாவூர்

முதலாம் இராசராசசோழ தேவருக்குப் பின் அரியணைக் கண்டவன், அவரின் புதல்வனான முதலாம் இராசேந்திர சோழனாவான். இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம் (மலேசியா), சிறீவிசயம், சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் – கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரியக் கோயிலையொத்த வடிவமைப்பைச் சார்ந்து இருந்தாலும், கட்டிட அமைப்பில் பெண்மையின் மென்மையையும் அழகையும் புகுத்தி தனக்கென்று ஒரு சிறப்பைப் பெற்றிருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் ஆண் என்றால், கங்கை கொண்ட சோழீச்சுரம் பெண் எனக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுரம். கோயில் கட்டிட அமைப்பில் நேர்க்கோடுகளுக்கு பதில் வளைகோடுகள் கையாளப்பட்டிருப்பதினால்தான் இக்கோயில் பெண்மையின் அம்சங்களைப் பறைச்சாற்றுகிறது. தஞ்சை பெரிய கோயிலைவிட, கங்கை கொண்ட சோழீச்சுர கோயிலைப் பொலிவுப்படுத்துவத்தில் இராசேந்திரன் முனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று….

இத்தனைச் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கியிருக்கும் தமிழர் சிற்ப, கட்டிடக் கலையின் பெருமையை மீண்டும் பறைச்சாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது நமக்கு வாய்த்துள்ளது. இந்த வாய்ப்பை முழுமையாக தமிழர்கள் தமிழர்களுக்காக பயன்படுத்திக் கொள்ள, இத்தனைக் காலம் பூமிக்கடியில் புதைந்திருந்த ரகசியத்தை தமிழன்னை வெளிக்கொணர்ந்திருக்கிறாள். தொடந்து வாசியுங்கள்…

ஒரேக் கல்லில் ஒரு பெரிய நகரத்தையே உருவாக்குவது சாத்தியமா? சமீபத்தில் தஞ்சைக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வந்த ஒரு கோரிக்கை மனுதான் இந்த அதிசயத்தைச் சுமந்து நிற்கிறது. இந்த மனுவைக் கொடுத்தவர் ஆ.அரசு.

தமிழ் மரபுக் கட்டிடக் கலைஞரான இவர் வழக்கறிஞரும்கூட. ‘காய்-கனி களஞ்சிய குளிர்பதனக் கிடங்கை மரத்தால் அமைக்கலாம் எனக் கண்டுபிடித்துச் சொன்னதற்காக இவர் மத்திய அரசின் நிதியைப் பெற்றவர். இத்திட்டம் தற்போது உலகப் பொருளகத்தின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்விக்கு அரசு எடுத்ததுமே, “அந்தப் பாறை தமிழகத்தில் முக்கியமான ஓர் இடத்தில் இருக்கிறது. அது பற்றிய விவரங்களை நான் தற்போது யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்பவில்லை” என்று ஆரம்பித்தார்.

“சில மாதங்களுக்கு முன் என் பிறந்தநாளையொட்டி ஒரு கோயிலுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வரும்போதுதான் அந்த பிரம்மாண்டமான பாறையைப் பார்த்தேன். அதன் மீது ஏறிப் பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே கல் பாறையாகக் காட்சி அளித்தது. இதுபற்றி அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தபோது நிறைய உபரி தகவல்கள் கிடைத்தன. காரில் அந்தப் பாறையைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தபோதும் முழுமையாகப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாய் இருந்தது.

அதைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி, முதல்வர் தஞ்சை வந்தபோது அவரிடம் கோரிக்கை மனுக் கொடுத்தேன். வேறு எங்குமே காண முடியாத அந்தப் பாறை தமிழகத்தில் இருப்பதே நமக்குக் கிடைத்த வரம். இத்தனை நாட்களாக இதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருக்கிறோம். இந்தப் பாறையின் நீளம் ஐந்து கிலோ மீட்டர், உயரம் ஆயிரம் அடி, மொத்தம் 45 கோடி கன மீட்டர், உள்பரப்பு மட்டுமே 25 சதுர கிலோ மீட்டர்,. இந்த ஒற்றைக் கல் பாறையின் மூன்றில் இரண்டு பகுதி பூமிக்கு வெளியே இருக்கிறது. ஒரு பகுதி பூமிக்கு கீழே உள்ளது. இந்தப் பாறை ‘கிரானைடு’ வகையைச் சேர்ந்தது.

புவியியலின்படி காலத்தால் மிகத் தொன்மையான இது மிக அரிதான கடினப் பாறை. அசுந்தா, எல்லோரா குகைகள், புத்தரின் பல நூறு அடி உயரச் சிலை உள்ள ஆப்கனின் பாமியான் குன்றுகளை நான் சொல்லும் ஒற்றைக் கல் பாறையோடு ஒப்பிடலாம். ஆனால் அவை எல்லாம் பல நூறு கற்பலகை இணைந்து உருவான குன்றுகள். இவற்றில் எதுவுமே ஒற்றைக்கல் கிடையாது. நான் குறிப்பிடும் ஒற்றைக் கல் பாறை உலகின் முதல் பேரதிசயம்! தமிழ்த் தாயின் அரிய கருவூலம். இந்த வைரக்கல்லைப் பட்டை தீட்டி உலகின் பார்வைக்கு வழங்கும் கடமை நமக்கு இருக்கிறது.

மலை வடிவமாக இருக்கும் இந்த ஒற்றைக் கல் பாறையைக் கலை வடிவமாக மாற்ற முடியும். இந்தப் பாறையைக் குடைந்து இதனுள் ஓர் ஊரையே உருவாக்க முடியும். தஞ்சைப் பெரிய கோயிலைப் போல நான்கு மடங்கு உயரக் கோயில் குடையலாம். இந்திய நாடாளுமன்றத்தை விட மிகப் பெரிய அழகிய கூடம் பல கட்டலாம். பல குடைவரைக் கோயில்கள் அமைக்கலாம். நூறு அடி உயரமுள்ள கற்படிமம் பல ஆயிரம் வடிக்கலாம். சங்கத் தமிழ் இலக்கிய வரி அனைத்தையும் இங்கே முப்பரிமாண படைப்பு ஓவியமாக வடிக்கலாம். 1330 திருக்குறட்களை ஓவியம் ஆக்கலாம். மனித வரலாற்றை, புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ‘எல்லாம் காட்சிப் படிமம் ஆக்கலாம்’ இப்படி அரசு சொல்லிக் கொண்டே போகிறார்.

“ஒற்றைக் கல் பாறையைக் குடையும்போது கிடைக்கும் நாற்பதாயிரம் தூண்களில் புகழ் பெற்ற உலகத் தலைவர்களின் உருவச் சிலைகளைச் செதுக்கலாம். இதற்காக அரசு பத்து காசு செலவு செய்ய வேண்டியதில்லை. பாறையைக் குடையும்போது பல லட்சம் லாரி மணல், சல்லி கற்கள் கிடைக்கும். அதை விற்பனை செய்யும் போது 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். திட்டச் செலவுகள் நூறு கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 400 கோடி ரூபாய் அரசுக்கு ஆதாயம்தான். அதனால் இந்தப் பாறையை மாநில அரசு தன் அரிய வகைக் கருவூலமாக அறிவித்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

பல்லவர், சோழர், பாண்டியர் கால கட்டிடங்களை, சிற்பங்களை இப்போதும் நாம் கண்டு வியக்கிறோம்.. அத்தகைய கலைவடிவங்களை வடிக்கும் கலை நுட்ப அறிவு இப்போதும் நம்மிடையே இருக்கிறது. ஒரு கட்டிடம் அது கட்டப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவை, பண்பாட்டை, கலையை பிற்காலத்தில் மக்களுக்குக் காட்டும் வரலாற்று நினைவுப் பெட்டகம். நாமும் நம்முடையச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் வகையில் அரிய ஒற்றைக் கல் பாறை நம்மிடம் இருக்கிறது.

இந்த விடயங்களை எல்லாம் முதல்வருக்கு அளித்த மனுவில் சொல்லியிருக்கிறேன். தமிழை, தமிழரை, தமிழரின் பண்பாட்டை, கலையைத் தன் உயிர் மூச்சாகக் கருதும் முதல்வர் ஒற்றைக் கல் சிற்பக் கலை நகரை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தப் பாறை ‘கிரானைடு’ வகையைச் சேர்ந்தது என்பதால் இதற்குப் பல பெரும்புள்ளிகள் குறிவைத்திருக்கிறார்கள்.. பாறை இருக்குமிடத்தை நான் சொல்லிவிட்டால், அதற்குப் பலரும் உரிமைக் கொண்டாடுவார்கள். அதனால்தான் அது இருக்கும் இடத்தை யாரிடமும் நான் சொல்லவில்லை என்கிறார் அரசு.

இந்தத் திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரசு. இதற்காக வி.ஐ.பி கவிஞர் மூலமாக பேசி வருகிறார். அதே நேரம் அந்தப் பாறையின் முழுப் பரிணாமத்தையும் சுழலுந்து உதவியோடு ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து, அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் பணியிலும் இறங்கியிருக்கிறார் அரசு.

தமிழர்களின் பெருமையை மறக்கடிக்கும் வேலைகள் பல ஆங்காங்கே நடந்தாலும், அவற்றைப் புறக்கணித்து தமிழரின் தொன்மையை, சிறப்பை உலகிற்கு கலைநயத்துடன் வெளிக்கொணர நல்லதொரு வாய்ப்பை தமிழன்னை நமக்கு வழங்கியிருக்கிறாள். பூமிக்கும் பாதகமில்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கேடுவிளைவிக்காது, முறையான ஆராய்ச்சிகளுக்குப்பின் இம்மாபெரும் திட்டம் விரைவில் செயல் வடிவம் காண வேண்டும் என தமிழர்கள் அனைவரும் மனதார வாழ்த்திடுவோம். கல்லிலே கலைவண்ணம் கானத் துடிக்கும் ஆ.அரசுவின் கனவு பலித்திட வாழ்த்துகள்.

Get this widget | Track details | eSnips Social DNA

சில தகவல்கள் :-

(1) மகேந்திரவர்மப் பல்லவன் (கி.பி. 600 முதல் 630 வரை)

(2) மாமல்லபுரத்தில் (தற்போதைய மகாபலிபுரம்)

(3) குடவரைக் கோயில்களை (மாபெரும் பாறைகளைக் குடைந்து எழுப்பப்படும் ஆலயங்கள்)

(4) முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630 – 668 வரை) இவனின் மற்றொரு பெயர் ‘மாமல்லன்’

(5) மாமல்லன் (சிறந்த மல்யுத்த வீரன்)

(6) புடைப்புச் சிற்பங்கள் (நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தவை.)

(7) ஒற்றைக்கல் தளி (ஒரே பாறையைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆலயம்)

(8) பரஞ்சோதி (இவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவரை சிறுத்தொண்ட நாயனார் என அழைப்பர்.)

(9) தஞ்சை (தற்போது தஞ்சாவூர்)

மேற்கோள்கள் :-

1 ) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

2) http://en.wikipedia.org/wiki/Chola

3) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

4)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

5) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

6) நயனம் : 21 பார்வை : 32 – பக்கம் 23


கல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு!

ஓகஸ்ட் 13, 2008

அன்று….

கல்லிலே கலை வண்ணம் கண்டவர்களில் பெயர்ப்போனவர்கள் தமிழர்கள். ஆயக் கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான சிற்பக் கலையின் பிறப்பிடமே தமிழகம்தான் என்று கூறும் அளவிற்கு, ஆயிரக்கணக்கான பழங்கால கலைப்படைப்புகள் தங்களிடமுள்ள உயிர்ப்பையும் வனப்பையும் இன்றளவிலும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன. கலைகளின் பொற்காலம் எனக் கருதப்படும் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி வடதமிழகத்தில் கோலோச்சி இருந்த சமயம், முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்(1) எனும் அரசன் மாமல்லபுரத்தில்(2) குடவரைக் கோயில்களை(3) எழுப்பி சிற்பக் கலைக்கோர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். இவன் ஆட்சிக் காலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய பெருஞ்சமயங்கள் பரஸ்பரம் பெற்றுத் திகழ்ந்ததோடல்லாமல், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் சிற்பக் கலை, நடனக் கலை, ஓவியக் கலை ஆகியவற்றைப் பேணிக்காக்கும் ஒருக் கலைக்கூடமாக அன்று செழிப்புற்றிருந்தன.

குடைவரைக் கோயில்கள் – மாமல்லபுரம்

ஒற்றைக் கல் யானை, ஒற்றைக்கல் தளி – மாமல்லபுரம்

முதலாம் மகேந்திரவர்மனுக்கு அடுத்து பல்லவ பட்டத்து அரியணையில் ஏறிய முதலாம் நரசிம்மவர்மன்(4), வாதாபி மன்னன் இரண்டாம் புலகேசியைக் கொன்று, வாதாபியை வென்று, பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மேலைசாளுக்கியம் வரை விஸ்தரித்து மாமல்லன்(5) என்றப் பெயரோடு திகழ்ந்தான். ஆனால் அவனுக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தவை போர்களின் வீரசாகசங்கள் அல்ல, மாற்றாக அவன் சிற்பக் கலைகளுக்குச் செய்த சேவையே நிலையான புகழை ஈட்டித் தந்தன.

குடைவரைக் கோயில் – மாமல்லபுரம்



பகீரதன் தபசு அல்லது அர்சுன தபசு (புடைப்புச் சிற்பங்கள்) – மாமல்லபுரம்

இன்றளவிலும் காலத்தால் அழியாத மாமல்லபுரப் புடைப்புச் சிற்பங்களும்(6), குடைவரக் கோயில்களும், ஒற்றைக்கல் தளிகளும்(7) நரசிம்மவர்ம பல்லவனின் புகழ்பாடும் சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இவன் காலத்தில்தான், பல்லவப் போர்ப் படையின் தளபதியாக விளங்கிய பரஞ்சோதி(8) வாதாபியை வெற்றிக் கண்டதும், அங்கு பரவலாக வணங்கப்பட்ட கணபதி சிலையை முதன்முதலாக தமிழகத்திற்குக் கொண்டு வந்து, திருசெங்காட்டங்குடி எனும் ஊரில் பிரதிட்டை செய்தார். அதற்கு முன்பு தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்பது வரலாற்று ஆய்வாளார்களின் கருத்து. மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற புடைப்புச் சிற்பங்கள் கொண்ட பாறை ஒன்று உள்ளது. வெடிப்பு ஏற்பட்டு இரண்டாகக் காட்சியளிப்பதுபோல் இருக்கும் அந்த மாபாறையின் பெயர் அருச்சுனன் தபசு. இப்பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அருச்சுனன் சிவபெருமானை நோக்கி, பாசுபத அசுத்திரம் பெற வேண்டி ஒற்றைக் காலில் தவம் செய்வதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் பாறையில் ஏற்பட்ட வெடிப்பு ஊனமாகத் தெரிந்தாலும் அதனையும் கலைநயத்தோடு ஒரு ஆறாக வடிவது போல அந்த வெடிப்பைச் சித்தரித்து ஊனத்தை நீக்கியிருக்கிறார்கள் பண்டைய தமிழக சிற்பிகள். ஒற்றைக் காலில் தவம் புரியும் அந்த மனிதன் அருச்சுனன் அல்ல, ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி பகீரதன் புரியும் தவம் என்பதே உண்மை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இப்பாறையை பகீரதன் தபசு எனவும் குறிப்பிடுகின்றனர். இப்பாறையில் ஒரு பூனையும் ஒற்றைக் காலில் தவம் புரிவதுபோலும், சில எலிகள் அப்பூனையைக் கவனிப்பதுபோலவும் நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.

பெரும்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் – மாமல்லபுரம்

ஒற்றைக் கல் தளி – மாமல்லபுரம்

வரலாற்றில் தமிழர்களின் மற்றுமொரு உன்னதக் கலைப்படைப்பின் விருந்தாக அமைவது, தஞ்சையில்(9) உள்ள இராசராசேச்சுரம் திருகற்றளி அல்லது தஞ்சை பெருவுடையார் ஆலயமாகும். தற்போது பிரகதீசுவரர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில் எனும் பெயர்களால் இக்கலைச்சின்னம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் உலகின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இராசராசேச்சுரம் (தஞ்சை பெரிய கோயில்) – தஞ்சாவூர்

உலகமே இன்று வியந்து நிற்கும் இம்மாபெரும் திருகற்றளியை எழுப்பியவர், அருள்மொழிவர்மன் எனும் இயற்பெயர்கொண்ட முதலாம் இராசராசசோழ தேவர் ஆவார். இவர் ஆட்சி நடைப்பெற்றக் காலம் (கி.பி 985 – கி.பி 1012), தமிழகத்தின் பொற்காலம் என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும், வளர்ந்து வரும் வசதிக்கும், ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராசராசசோழ தேவர் கட்ட நினைத்தார் போலும். 216 அடிகள் உயரமுள்ள கோயில் விமானத்தை நவீன தொழில்நுட்பம் ஏதும் இல்லாத அக்காலத்தில் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று ஆராய்சியாளர்களும், இக்கோயிலை காண வருகின்றவர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இராசராசேச்சுரம் விமானத்தை அமைப்பதற்கு, விமானத் தளத்தை நோக்கி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிருந்து ஒரு செங்குத்தான பாலம் ஒன்றை கட்டி, அதில் யானைகளைக் கொண்டு டன் கணக்கிலான கற்களை ஏற்றிச் சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாலம் தொடங்கப்பட்ட இடத்தினையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோயிலின் மற்றுமொருச் சிறப்பு, அங்கு வீற்றிருக்கும் நந்தி சிலையாகும். இக்கோயில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். நந்திச் சிலை குடிகொண்டிருக்கும் மண்டபமானது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில் நந்தி – தஞ்சாவூர்

முதலாம் இராசராசசோழ தேவருக்குப் பின் அரியணைக் கண்டவன், அவரின் புதல்வனான முதலாம் இராசேந்திர சோழனாவான். இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம் (மலேசியா), சிறீவிசயம், சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் – கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரியக் கோயிலையொத்த வடிவமைப்பைச் சார்ந்து இருந்தாலும், கட்டிட அமைப்பில் பெண்மையின் மென்மையையும் அழகையும் புகுத்தி தனக்கென்று ஒரு சிறப்பைப் பெற்றிருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் ஆண் என்றால், கங்கை கொண்ட சோழீச்சுரம் பெண் எனக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுரம். கோயில் கட்டிட அமைப்பில் நேர்க்கோடுகளுக்கு பதில் வளைகோடுகள் கையாளப்பட்டிருப்பதினால்தான் இக்கோயில் பெண்மையின் அம்சங்களைப் பறைச்சாற்றுகிறது. தஞ்சை பெரிய கோயிலைவிட, கங்கை கொண்ட சோழீச்சுர கோயிலைப் பொலிவுப்படுத்துவத்தில் இராசேந்திரன் முனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று….

இத்தனைச் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கியிருக்கும் தமிழர் சிற்ப, கட்டிடக் கலையின் பெருமையை மீண்டும் பறைச்சாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது நமக்கு வாய்த்துள்ளது. இந்த வாய்ப்பை முழுமையாக தமிழர்கள் தமிழர்களுக்காக பயன்படுத்திக் கொள்ள, இத்தனைக் காலம் பூமிக்கடியில் புதைந்திருந்த ரகசியத்தை தமிழன்னை வெளிக்கொணர்ந்திருக்கிறாள். தொடந்து வாசியுங்கள்…

ஒரேக் கல்லில் ஒரு பெரிய நகரத்தையே உருவாக்குவது சாத்தியமா? சமீபத்தில் தஞ்சைக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வந்த ஒரு கோரிக்கை மனுதான் இந்த அதிசயத்தைச் சுமந்து நிற்கிறது. இந்த மனுவைக் கொடுத்தவர் ஆ.அரசு.

தமிழ் மரபுக் கட்டிடக் கலைஞரான இவர் வழக்கறிஞரும்கூட. ‘காய்-கனி களஞ்சிய குளிர்பதனக் கிடங்கை மரத்தால் அமைக்கலாம் எனக் கண்டுபிடித்துச் சொன்னதற்காக இவர் மத்திய அரசின் நிதியைப் பெற்றவர். இத்திட்டம் தற்போது உலகப் பொருளகத்தின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்விக்கு அரசு எடுத்ததுமே, “அந்தப் பாறை தமிழகத்தில் முக்கியமான ஓர் இடத்தில் இருக்கிறது. அது பற்றிய விவரங்களை நான் தற்போது யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்பவில்லை” என்று ஆரம்பித்தார்.

“சில மாதங்களுக்கு முன் என் பிறந்தநாளையொட்டி ஒரு கோயிலுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வரும்போதுதான் அந்த பிரம்மாண்டமான பாறையைப் பார்த்தேன். அதன் மீது ஏறிப் பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே கல் பாறையாகக் காட்சி அளித்தது. இதுபற்றி அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தபோது நிறைய உபரி தகவல்கள் கிடைத்தன. காரில் அந்தப் பாறையைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தபோதும் முழுமையாகப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாய் இருந்தது.

அதைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி, முதல்வர் தஞ்சை வந்தபோது அவரிடம் கோரிக்கை மனுக் கொடுத்தேன். வேறு எங்குமே காண முடியாத அந்தப் பாறை தமிழகத்தில் இருப்பதே நமக்குக் கிடைத்த வரம். இத்தனை நாட்களாக இதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருக்கிறோம். இந்தப் பாறையின் நீளம் ஐந்து கிலோ மீட்டர், உயரம் ஆயிரம் அடி, மொத்தம் 45 கோடி கன மீட்டர், உள்பரப்பு மட்டுமே 25 சதுர கிலோ மீட்டர்,. இந்த ஒற்றைக் கல் பாறையின் மூன்றில் இரண்டு பகுதி பூமிக்கு வெளியே இருக்கிறது. ஒரு பகுதி பூமிக்கு கீழே உள்ளது. இந்தப் பாறை ‘கிரானைடு’ வகையைச் சேர்ந்தது.

புவியியலின்படி காலத்தால் மிகத் தொன்மையான இது மிக அரிதான கடினப் பாறை. அசுந்தா, எல்லோரா குகைகள், புத்தரின் பல நூறு அடி உயரச் சிலை உள்ள ஆப்கனின் பாமியான் குன்றுகளை நான் சொல்லும் ஒற்றைக் கல் பாறையோடு ஒப்பிடலாம். ஆனால் அவை எல்லாம் பல நூறு கற்பலகை இணைந்து உருவான குன்றுகள். இவற்றில் எதுவுமே ஒற்றைக்கல் கிடையாது. நான் குறிப்பிடும் ஒற்றைக் கல் பாறை உலகின் முதல் பேரதிசயம்! தமிழ்த் தாயின் அரிய கருவூலம். இந்த வைரக்கல்லைப் பட்டை தீட்டி உலகின் பார்வைக்கு வழங்கும் கடமை நமக்கு இருக்கிறது.

மலை வடிவமாக இருக்கும் இந்த ஒற்றைக் கல் பாறையைக் கலை வடிவமாக மாற்ற முடியும். இந்தப் பாறையைக் குடைந்து இதனுள் ஓர் ஊரையே உருவாக்க முடியும். தஞ்சைப் பெரிய கோயிலைப் போல நான்கு மடங்கு உயரக் கோயில் குடையலாம். இந்திய நாடாளுமன்றத்தை விட மிகப் பெரிய அழகிய கூடம் பல கட்டலாம். பல குடைவரைக் கோயில்கள் அமைக்கலாம். நூறு அடி உயரமுள்ள கற்படிமம் பல ஆயிரம் வடிக்கலாம். சங்கத் தமிழ் இலக்கிய வரி அனைத்தையும் இங்கே முப்பரிமாண படைப்பு ஓவியமாக வடிக்கலாம். 1330 திருக்குறட்களை ஓவியம் ஆக்கலாம். மனித வரலாற்றை, புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ‘எல்லாம் காட்சிப் படிமம் ஆக்கலாம்’ இப்படி அரசு சொல்லிக் கொண்டே போகிறார்.

“ஒற்றைக் கல் பாறையைக் குடையும்போது கிடைக்கும் நாற்பதாயிரம் தூண்களில் புகழ் பெற்ற உலகத் தலைவர்களின் உருவச் சிலைகளைச் செதுக்கலாம். இதற்காக அரசு பத்து காசு செலவு செய்ய வேண்டியதில்லை. பாறையைக் குடையும்போது பல லட்சம் லாரி மணல், சல்லி கற்கள் கிடைக்கும். அதை விற்பனை செய்யும் போது 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். திட்டச் செலவுகள் நூறு கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 400 கோடி ரூபாய் அரசுக்கு ஆதாயம்தான். அதனால் இந்தப் பாறையை மாநில அரசு தன் அரிய வகைக் கருவூலமாக அறிவித்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

பல்லவர், சோழர், பாண்டியர் கால கட்டிடங்களை, சிற்பங்களை இப்போதும் நாம் கண்டு வியக்கிறோம்.. அத்தகைய கலைவடிவங்களை வடிக்கும் கலை நுட்ப அறிவு இப்போதும் நம்மிடையே இருக்கிறது. ஒரு கட்டிடம் அது கட்டப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவை, பண்பாட்டை, கலையை பிற்காலத்தில் மக்களுக்குக் காட்டும் வரலாற்று நினைவுப் பெட்டகம். நாமும் நம்முடையச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் வகையில் அரிய ஒற்றைக் கல் பாறை நம்மிடம் இருக்கிறது.

இந்த விடயங்களை எல்லாம் முதல்வருக்கு அளித்த மனுவில் சொல்லியிருக்கிறேன். தமிழை, தமிழரை, தமிழரின் பண்பாட்டை, கலையைத் தன் உயிர் மூச்சாகக் கருதும் முதல்வர் ஒற்றைக் கல் சிற்பக் கலை நகரை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தப் பாறை ‘கிரானைடு’ வகையைச் சேர்ந்தது என்பதால் இதற்குப் பல பெரும்புள்ளிகள் குறிவைத்திருக்கிறார்கள்.. பாறை இருக்குமிடத்தை நான் சொல்லிவிட்டால், அதற்குப் பலரும் உரிமைக் கொண்டாடுவார்கள். அதனால்தான் அது இருக்கும் இடத்தை யாரிடமும் நான் சொல்லவில்லை என்கிறார் அரசு.

இந்தத் திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரசு. இதற்காக வி.ஐ.பி கவிஞர் மூலமாக பேசி வருகிறார். அதே நேரம் அந்தப் பாறையின் முழுப் பரிணாமத்தையும் சுழலுந்து உதவியோடு ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து, அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் பணியிலும் இறங்கியிருக்கிறார் அரசு.

தமிழர்களின் பெருமையை மறக்கடிக்கும் வேலைகள் பல ஆங்காங்கே நடந்தாலும், அவற்றைப் புறக்கணித்து தமிழரின் தொன்மையை, சிறப்பை உலகிற்கு கலைநயத்துடன் வெளிக்கொணர நல்லதொரு வாய்ப்பை தமிழன்னை நமக்கு வழங்கியிருக்கிறாள். பூமிக்கும் பாதகமில்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கேடுவிளைவிக்காது, முறையான ஆராய்ச்சிகளுக்குப்பின் இம்மாபெரும் திட்டம் விரைவில் செயல் வடிவம் காண வேண்டும் என தமிழர்கள் அனைவரும் மனதார வாழ்த்திடுவோம். கல்லிலே கலைவண்ணம் கானத் துடிக்கும் ஆ.அரசுவின் கனவு பலித்திட வாழ்த்துகள்.

Get this widget | Track details | eSnips Social DNA

சில தகவல்கள் :-

(1) மகேந்திரவர்மப் பல்லவன் (கி.பி. 600 முதல் 630 வரை)

(2) மாமல்லபுரத்தில் (தற்போதைய மகாபலிபுரம்)

(3) குடவரைக் கோயில்களை (மாபெரும் பாறைகளைக் குடைந்து எழுப்பப்படும் ஆலயங்கள்)

(4) முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630 – 668 வரை) இவனின் மற்றொரு பெயர் ‘மாமல்லன்’

(5) மாமல்லன் (சிறந்த மல்யுத்த வீரன்)

(6) புடைப்புச் சிற்பங்கள் (நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தவை.)

(7) ஒற்றைக்கல் தளி (ஒரே பாறையைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆலயம்)

(8) பரஞ்சோதி (இவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவரை சிறுத்தொண்ட நாயனார் என அழைப்பர்.)

(9) தஞ்சை (தற்போது தஞ்சாவூர்)

மேற்கோள்கள் :-

1 ) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

2) http://en.wikipedia.org/wiki/Chola

3) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

4)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

5) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

6) நயனம் : 21 பார்வை : 32 – பக்கம் 23


தசாவதார நுணுக்கங்கள்…

ஜூன் 28, 2008

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு தற்போது உலகமெங்கிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கும் தசாவதாரம் திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா?

படம் பார்த்தவர்கள் நிச்சயம் பிரமித்திருப்பீர்கள். ஒழுங்கிண்மைக் கோட்பாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தசாவதாரம் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ‘கேயோசு தியாரி’ அல்லது ஒழுங்கிண்மைக் கோட்பாடு எப்படி இப்படக் கருவில் மையமிட்டு கதையின் 10 அவதாரங்களையும் பகடைக் காய்களாய் நகர்த்தியுள்ளது எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், திருத்தமிழில் சுப.நற்குணன் ஐயா வெளியிட்டுள்ள தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள் எனும் திரைவிமர்சனத்தை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

பலவகையில் நுணுக்கமாகப் புனையப்பட்ட இக்கதையில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. திரைப்படத்தில் நாம் கண்ட கமலின் 10 வேடங்களையும், ஏன் அவர் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதற்கு காரணமும் உள்ளது.

விஷ்ணு புராணத்தில் திருமால் எடுத்த மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், இராமாவதாரம், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகிய 10 அவதாரங்களுக்கும் கமலஹாசன் தனது 10 வேடங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையை கொண்டுவந்திருக்கிறார். எந்தெந்தெ வேடங்கள் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலிக்கின்றன என்று பார்ப்போம்.


மச்ச (மீன்) அவதாரம் : மச்ச அவதாரமானது நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காப்பதற்குத் தோன்றியது போல் ரங்கராஜ நம்பி திருமால் சிலையைக் காப்பாற்றும் போராட்டத்தின் இறுதியில் கடலில் சங்கமமாகி உயிரை விடுகிறான்.

கூர்ம (ஆமை) அவதாரம் : திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். திருப்பாற்கடலிலிருந்து அமிருதம் சுரக்க இறுதியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. ஜார்ச் புஷ் உருவத்தில் ஆமையாக தோன்றாவிட்டாலும், உலக அரசியலில் அவர் வகிக்கும் முக்கிய பொறுப்பை இது எடுத்துக் காட்டுகிறது. அவர் எடுக்கும் சில முடிவுகளில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும் வல்லமை அவர் ஏற்றிருக்கும் பொறுப்பிற்கு உள்ளது.

வராக (பன்றி) அவதாரம் : பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாக்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து பூமியை மறைத்து வைத்து பின் தனது மூக்கின்மேல் வைத்து வெளிக்கொணர்ந்து காப்பாற்றினார். கிருஷ்ணவேணி பாட்டி ‘முகுந்தா முகுந்தா’ பாடலுக்கு வராக அவதாரத்தை செய்து காட்டினார். அதோடு தபாலில் வந்த கிருமியை அலமாரியில் புகுந்து மறைந்துக் கொண்டு பின் வெளியே கொண்டு வந்து கோவிந்தராஜ சிலையினுள் போட்டுவிட்டு, அனைவரையும் கோவிந்தராஜக் கடவுள் காப்பாற்றிவிட்டதாகக் கூறுகிறார்.


நரசிம்ம (பாதி சிம்மம், பாதி மனிதன் )அவதாரம் : திருமால் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம். சிங்கேன் நரஹசி எனும் சப்பானிய தற்காப்புக் கலைஞனிடம் நரசிம்ம அவதாரத்தின் ஒற்றுமைகளைக் காண முடிகிறது. அவனது பெயரிலேயே ‘சிங்’ சிம்மத்தைக் குறிக்கிறது. ‘நர’ மனிதனைக் குறிக்கிறது. நரசிம்மர் தனது இரண்டு கைகளால் இரணியனைக் கொன்றது போல், சிங்கேன் நரஹசி கிறிஸ்டியன் ஃப்லேட்சரை கொல்வதற்காக தனது தற்காப்புக் கலையைக் கொண்டே, அதாவது ஆயுதமின்றி கொல்லச் செல்கிறான்.


வாமன அவதாரம் : வாமன அவதாரத்தில், திருமால் பிராமண சிறுவனாகத் தோன்றி, மகாபலி அரசனிடம் மூன்றடி மண் கேட்டு வானுயர வளர்ந்து மூவுலகத்தையும் அளந்து இறுதியில் மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது அழுத்தி வதம் செய்தார். அதேப்போல், வானுயர வளர்ந்த வாமனரைப் போல், கலிஃபுல்லா கான் உயர்ந்த மனிதராக வளம் வருகிறார்.


பரசுராமவதாரம் : பரசுராமர் ஜமதக்னி முனிவருக்குப் பிறந்தவர். பரசு என்றால் கோடரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடரியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். பாசுராமர் தனது வில்லையும் அமபையும் கொண்டு சத்திரியர்களின் 21 பரம்பரைகளையும் அழித்தார். கிறிஸ்டியன் ஃப்லேட்சர் பரசுராமரைப் போல் பழைய ஆயுதமான கோடரி, அம்பு, வில் வைத்திருக்காவிட்டாலும், நவீன ஆயுதமான துப்பாக்கி கொண்டு அனைவரையும் கொல்கிறார்.


இராமாவதாரம் : இல்லறத்திற்கு உகந்த தலைவனாக எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் இராமர். இவர் தனது மனைவி சீதா பிராட்டியாரின் மீது வைத்திருந்த பாசம் அலாதியானது. தனது மனைவியை இராவணனிடமிருந்து காப்பாற்றுவதற்கு அவர் அனைத்தையும் இழந்தார். அவதார் சிங் வேடம் இராமாவதாரத்தின் ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது. இசையா அல்லது மனைவியா என முடிவெடுக்கும் ஒரு இக்கட்டான நிலைக்கு அவதார் சிங் தள்ளப்படுகிறார். இறுதியில் மனைவிதான் தனக்கு முக்கியம் என மனைவி மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறார்.


பலராமர் அவதாரம் : பலராமர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் கிருஷ்ணருடைய அண்ணனாவார். பல்ராம் நாயுடு எனும் பெயர் கொண்ட சி.பி.ஐ வேடம் பலராமர் என்ற பெயருடன் ஒன்றியுள்ளது.

கிருஷ்ணாவதாரம் : வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார். வின்செண்ட் பூவராகன் வேடம் கிருஷ்ணவதாரத்தை பிரதிபலிக்கிறது. நிறத்தில் இருவரும் கறுப்பு. திரௌபதியின் மானத்தைக் காப்பாற்ற கிருஷ்ணர் சேலையைக் கொடுத்ததுபோல், ஆண்டாளின் சேலையை மணல் திருடன் பிடித்து இழுக்கும் வேளையில் பூவராகன் அங்கேத் தோன்றி கற்பழிப்பு முயற்சியைத் தடுக்கிறார். கிருஷ்ணர் தனது இறுதி காலத்தில், வேடன் ஒருவன் தவறுதலாக அவரது காலில் விஷ அம்பெய்ய அவர் விண்ணுலகம் செல்கிறார். அதேப்போல், பூவராகன் சுனாமியின் போது ஒரு காரில் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு இரும்புத் தூண் அவர் காலில் குத்தி அவரை அங்கிருந்து நகரமுடியாமல் செய்து விடுகிறது. பூவராகன் இரும்புத்தூணை அகற்ற முயற்சி செய்தும் பலனளிக்காமல் நீரில் மூழ்கி இறக்கிறார்.

கல்கி அவதாரம் : கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். கோவிந்த ராமசாமி என்கிற உயிரியல் விஞ்ஞானி கல்கி அவதாரத்தோடு ஒன்றிய ஒரு பாத்திரமாகும். தீயவைகளை அழித்து உலகைக் காக்க வரும் கல்கி அவதாரத்தைப்போல், கிருமி பரவாமல் உலகத்தைக் காப்பாற்ற கோவிந்த ராமசாமி கடுமையாக முயற்சிக்கிறார். இறுதியில் வெற்றியும் பெறுகிறார்.

என்ன வாசகர்களே, கமலின் பத்து வேடங்களும் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலித்தனவா?

தசாவதாரம் எனும் திரைப்படத்தைப்பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு விடயங்களை மாறுபட்ட கோணங்களில் ஆராய்வதற்கு இப்படம் வழிவகுக்கிறது. இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். கிருத்துவ பைபிளில் உலகம் அழியும் தருவாயில் யேசுநாதர் ஒரு பெரிய படகை அனுப்பி பக்தர்களைக் காப்பாற்றுவார் எனக் கூறுகிறது. அதேப்போல் இப்படத்தில் சுனாமி அலையைக் கண்டதும் விஞ்ஞானியும், தற்காப்புக் கலைஞனும், ஆண்டாளும் ஒரு படகில் ஏறிக் கொள்வார்கள். சுனாமி அலை ஓய்ந்ததும் அப்படகு ஒரு தேவாலயத்தின் மீது நங்கூரமிட்டிருக்கும். இதுப்போல பல துணுக்குகள் கைவசம் இருந்தாலும் அனைத்தையும் சொல்வதாயில்லை. பிறகு முழுக்கதையையும் சொன்னதாகிவிடும். இத்திரைப்படத்தைக் காணாதவர்கள், அருகிலுள்ள திரையரங்கில் சென்று பார்க்கவும், திருட்டு வி.சி.டியில் பார்த்தால் உங்களுக்குத்தான் நஷ்டம், படத்தின் பிரம்மாண்டத்தை அதில் காண முடியாது.

படத்தைப் பார்த்துவிட்டவர்கள் தொழில்நுட்பத்தை வியந்திருப்பார்கள், ஆனால் ஒருசிலர் மட்டுமே கதையின் நுணுக்கத்தை ஆராய்ந்திருப்பர். கதைக்காக மீண்டும் ஒருமுறை படம் பார்க்கச் செல்ல வேண்டும் என எண்ணினால் கழுகுப் பார்வையோடு சென்று கண்டுகளித்து வாருங்கள். ஒரு தமிழன் இப்படியெல்லாம் யோசித்து ஒரு கதை தயாரிக்க முடியுமா என நிச்சயம் வியப்பீர்கள்.

பிரம்மாண்டம் + கதை + தொழில்நுட்பம் + வேகம் + உழைப்பு + கருத்து = தசாவதாரம்


தசாவதார நுணுக்கங்கள்…

ஜூன் 28, 2008

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு தற்போது உலகமெங்கிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கும் தசாவதாரம் திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா?

படம் பார்த்தவர்கள் நிச்சயம் பிரமித்திருப்பீர்கள். ஒழுங்கிண்மைக் கோட்பாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தசாவதாரம் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ‘கேயோசு தியாரி’ அல்லது ஒழுங்கிண்மைக் கோட்பாடு எப்படி இப்படக் கருவில் மையமிட்டு கதையின் 10 அவதாரங்களையும் பகடைக் காய்களாய் நகர்த்தியுள்ளது எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், திருத்தமிழில் சுப.நற்குணன் ஐயா வெளியிட்டுள்ள தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள் எனும் திரைவிமர்சனத்தை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

பலவகையில் நுணுக்கமாகப் புனையப்பட்ட இக்கதையில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. திரைப்படத்தில் நாம் கண்ட கமலின் 10 வேடங்களையும், ஏன் அவர் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதற்கு காரணமும் உள்ளது.

விஷ்ணு புராணத்தில் திருமால் எடுத்த மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், இராமாவதாரம், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகிய 10 அவதாரங்களுக்கும் கமலஹாசன் தனது 10 வேடங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையை கொண்டுவந்திருக்கிறார். எந்தெந்தெ வேடங்கள் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலிக்கின்றன என்று பார்ப்போம்.


மச்ச (மீன்) அவதாரம் : மச்ச அவதாரமானது நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காப்பதற்குத் தோன்றியது போல் ரங்கராஜ நம்பி திருமால் சிலையைக் காப்பாற்றும் போராட்டத்தின் இறுதியில் கடலில் சங்கமமாகி உயிரை விடுகிறான்.

கூர்ம (ஆமை) அவதாரம் : திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். திருப்பாற்கடலிலிருந்து அமிருதம் சுரக்க இறுதியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. ஜார்ச் புஷ் உருவத்தில் ஆமையாக தோன்றாவிட்டாலும், உலக அரசியலில் அவர் வகிக்கும் முக்கிய பொறுப்பை இது எடுத்துக் காட்டுகிறது. அவர் எடுக்கும் சில முடிவுகளில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும் வல்லமை அவர் ஏற்றிருக்கும் பொறுப்பிற்கு உள்ளது.

வராக (பன்றி) அவதாரம் : பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாக்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து பூமியை மறைத்து வைத்து பின் தனது மூக்கின்மேல் வைத்து வெளிக்கொணர்ந்து காப்பாற்றினார். கிருஷ்ணவேணி பாட்டி ‘முகுந்தா முகுந்தா’ பாடலுக்கு வராக அவதாரத்தை செய்து காட்டினார். அதோடு தபாலில் வந்த கிருமியை அலமாரியில் புகுந்து மறைந்துக் கொண்டு பின் வெளியே கொண்டு வந்து கோவிந்தராஜ சிலையினுள் போட்டுவிட்டு, அனைவரையும் கோவிந்தராஜக் கடவுள் காப்பாற்றிவிட்டதாகக் கூறுகிறார்.


நரசிம்ம (பாதி சிம்மம், பாதி மனிதன் )அவதாரம் : திருமால் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம். சிங்கேன் நரஹசி எனும் சப்பானிய தற்காப்புக் கலைஞனிடம் நரசிம்ம அவதாரத்தின் ஒற்றுமைகளைக் காண முடிகிறது. அவனது பெயரிலேயே ‘சிங்’ சிம்மத்தைக் குறிக்கிறது. ‘நர’ மனிதனைக் குறிக்கிறது. நரசிம்மர் தனது இரண்டு கைகளால் இரணியனைக் கொன்றது போல், சிங்கேன் நரஹசி கிறிஸ்டியன் ஃப்லேட்சரை கொல்வதற்காக தனது தற்காப்புக் கலையைக் கொண்டே, அதாவது ஆயுதமின்றி கொல்லச் செல்கிறான்.


வாமன அவதாரம் : வாமன அவதாரத்தில், திருமால் பிராமண சிறுவனாகத் தோன்றி, மகாபலி அரசனிடம் மூன்றடி மண் கேட்டு வானுயர வளர்ந்து மூவுலகத்தையும் அளந்து இறுதியில் மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது அழுத்தி வதம் செய்தார். அதேப்போல், வானுயர வளர்ந்த வாமனரைப் போல், கலிஃபுல்லா கான் உயர்ந்த மனிதராக வளம் வருகிறார்.


பரசுராமவதாரம் : பரசுராமர் ஜமதக்னி முனிவருக்குப் பிறந்தவர். பரசு என்றால் கோடரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடரியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். பாசுராமர் தனது வில்லையும் அமபையும் கொண்டு சத்திரியர்களின் 21 பரம்பரைகளையும் அழித்தார். கிறிஸ்டியன் ஃப்லேட்சர் பரசுராமரைப் போல் பழைய ஆயுதமான கோடரி, அம்பு, வில் வைத்திருக்காவிட்டாலும், நவீன ஆயுதமான துப்பாக்கி கொண்டு அனைவரையும் கொல்கிறார்.


இராமாவதாரம் : இல்லறத்திற்கு உகந்த தலைவனாக எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் இராமர். இவர் தனது மனைவி சீதா பிராட்டியாரின் மீது வைத்திருந்த பாசம் அலாதியானது. தனது மனைவியை இராவணனிடமிருந்து காப்பாற்றுவதற்கு அவர் அனைத்தையும் இழந்தார். அவதார் சிங் வேடம் இராமாவதாரத்தின் ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது. இசையா அல்லது மனைவியா என முடிவெடுக்கும் ஒரு இக்கட்டான நிலைக்கு அவதார் சிங் தள்ளப்படுகிறார். இறுதியில் மனைவிதான் தனக்கு முக்கியம் என மனைவி மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறார்.


பலராமர் அவதாரம் : பலராமர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் கிருஷ்ணருடைய அண்ணனாவார். பல்ராம் நாயுடு எனும் பெயர் கொண்ட சி.பி.ஐ வேடம் பலராமர் என்ற பெயருடன் ஒன்றியுள்ளது.

கிருஷ்ணாவதாரம் : வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார். வின்செண்ட் பூவராகன் வேடம் கிருஷ்ணவதாரத்தை பிரதிபலிக்கிறது. நிறத்தில் இருவரும் கறுப்பு. திரௌபதியின் மானத்தைக் காப்பாற்ற கிருஷ்ணர் சேலையைக் கொடுத்ததுபோல், ஆண்டாளின் சேலையை மணல் திருடன் பிடித்து இழுக்கும் வேளையில் பூவராகன் அங்கேத் தோன்றி கற்பழிப்பு முயற்சியைத் தடுக்கிறார். கிருஷ்ணர் தனது இறுதி காலத்தில், வேடன் ஒருவன் தவறுதலாக அவரது காலில் விஷ அம்பெய்ய அவர் விண்ணுலகம் செல்கிறார். அதேப்போல், பூவராகன் சுனாமியின் போது ஒரு காரில் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு இரும்புத் தூண் அவர் காலில் குத்தி அவரை அங்கிருந்து நகரமுடியாமல் செய்து விடுகிறது. பூவராகன் இரும்புத்தூணை அகற்ற முயற்சி செய்தும் பலனளிக்காமல் நீரில் மூழ்கி இறக்கிறார்.

கல்கி அவதாரம் : கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். கோவிந்த ராமசாமி என்கிற உயிரியல் விஞ்ஞானி கல்கி அவதாரத்தோடு ஒன்றிய ஒரு பாத்திரமாகும். தீயவைகளை அழித்து உலகைக் காக்க வரும் கல்கி அவதாரத்தைப்போல், கிருமி பரவாமல் உலகத்தைக் காப்பாற்ற கோவிந்த ராமசாமி கடுமையாக முயற்சிக்கிறார். இறுதியில் வெற்றியும் பெறுகிறார்.

என்ன வாசகர்களே, கமலின் பத்து வேடங்களும் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலித்தனவா?

தசாவதாரம் எனும் திரைப்படத்தைப்பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு விடயங்களை மாறுபட்ட கோணங்களில் ஆராய்வதற்கு இப்படம் வழிவகுக்கிறது. இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். கிருத்துவ பைபிளில் உலகம் அழியும் தருவாயில் யேசுநாதர் ஒரு பெரிய படகை அனுப்பி பக்தர்களைக் காப்பாற்றுவார் எனக் கூறுகிறது. அதேப்போல் இப்படத்தில் சுனாமி அலையைக் கண்டதும் விஞ்ஞானியும், தற்காப்புக் கலைஞனும், ஆண்டாளும் ஒரு படகில் ஏறிக் கொள்வார்கள். சுனாமி அலை ஓய்ந்ததும் அப்படகு ஒரு தேவாலயத்தின் மீது நங்கூரமிட்டிருக்கும். இதுப்போல பல துணுக்குகள் கைவசம் இருந்தாலும் அனைத்தையும் சொல்வதாயில்லை. பிறகு முழுக்கதையையும் சொன்னதாகிவிடும். இத்திரைப்படத்தைக் காணாதவர்கள், அருகிலுள்ள திரையரங்கில் சென்று பார்க்கவும், திருட்டு வி.சி.டியில் பார்த்தால் உங்களுக்குத்தான் நஷ்டம், படத்தின் பிரம்மாண்டத்தை அதில் காண முடியாது.

படத்தைப் பார்த்துவிட்டவர்கள் தொழில்நுட்பத்தை வியந்திருப்பார்கள், ஆனால் ஒருசிலர் மட்டுமே கதையின் நுணுக்கத்தை ஆராய்ந்திருப்பர். கதைக்காக மீண்டும் ஒருமுறை படம் பார்க்கச் செல்ல வேண்டும் என எண்ணினால் கழுகுப் பார்வையோடு சென்று கண்டுகளித்து வாருங்கள். ஒரு தமிழன் இப்படியெல்லாம் யோசித்து ஒரு கதை தயாரிக்க முடியுமா என நிச்சயம் வியப்பீர்கள்.

பிரம்மாண்டம் + கதை + தொழில்நுட்பம் + வேகம் + உழைப்பு + கருத்து = தசாவதாரம்